புதன், 7 ஜூன், 2023

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்! (8-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


             ஒருவர் மற்றவர் மீது அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்பது ஆண்டவரின் கட்டளையாக இருந்தாலும், இக்கட்டளைக்கு செயல் வடிவம் தருவது பல குடும்பங்கள். அறியாத ஒரு நபரை மணமுடித்துக் கொண்டு, அவருக்காக வாழ்வையே அர்ப்பணிக்கின்ற ஒரு மகத்துவம் குடும்ப வாழ்வில் நிகழ்கிறது.  அதன் அடிப்படையில் எல்லாவிதமான இன்ப துன்பங்களிலும், ஒருவருக்கு துணையாக மற்றவர் இருக்கின்ற ஒரு நிகழ்வானது இவ்வுலகத்தில் அரங்கேறுகின்ற இடம் குடும்பம் எனலாம்.  தோபியாவும் சாராவும் தங்கள் திருமண வாழ்வை துவங்குவதற்கு முன்பாக இறைவனின் முன்னிலையில் முழந்தாள் படியிட்டு, இன்று முதல் நாங்கள் விரும்புகிற முதுமை எட்டும் வரை இணைந்திருப்பதற்கான ஆற்றலைத் தாரும் என்று வேண்டி இல்லற வாழ்வை துவங்கினார்கள். 

      இவர்களைப் போலவே இல்லறத்தில் இணைந்திருக்கிற அத்துணை உறவுகளும், அன்போடும் அறத்தோடும் ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழவும் இறைவனிடத்தில் அருள வேண்டிட இன்றைய நாள் இறைவார்த்தையின் வாயிலாக நாம் அழைக்கப்படுகிறோம்.   கடவுளின் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை வாழ்வாக்குகின்ற தம்பதியினராக இவ்வகிலத்தில் வாழ்ந்து காண்பிக்க இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...