சனி, 3 ஜூன், 2023

இம்மையில் சொத்தை நூறு மடங்கும் மறுமையில் நிலை வாழ்வையும் பெறாமல் போகார்! (30-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       கைமாறு கருதாமல் கடவுளுக்கு உரியவற்றை செய்கின்ற நபர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறைவார்த்தை வழியாக பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.  ஆண்டவருக்கு என தம் வாழ்வை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொருவரும் கைமாறு எதிர்பார்க்காமல் கடவுளுக்கான காரியங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதை இறை வார்த்தைகள் வலியுறுத்துகின்றன.

       இந்த வார்த்தைகளை நம் வாழ்வாக மாற்றிக் கொண்டு கடவுளுக்கு உரியவற்றை எப்போதும் தேடக் கூடியவர்களாகவும், அதை செய்வதில் கருத்தூன்றியவர்களாக இருப்பதற்குமான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...