சனி, 3 ஜூன், 2023

அன்னை மரியா- திரு அவையின் தாய்! (29-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      திரு அவையின் தாய் அன்னை மரியா என்பதை நினைவு கூர்ந்து கொண்டாடி மகிழ திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுகிறது. நம்பிக்கை இழந்த நிலையில் ஐய உணர்வோடு இருந்தவர்களை ஒன்றிணைத்து, மாடியறையில் ஜெபித்துக் கொண்டிருந்த அன்னை மரியா, தொடக்க காலத் திரு அவையில் சீடர்களுக்கு வழிகாட்டக் கூடியவராக இருந்தார்.  அன்னை மரியாவின் உடன் இருப்பு ஒவ்வொரு நாளும் சீடர்களை ஊக்கப்படுத்தியது.  இயேசுவின் மீதான நம்பிக்கையில் அவர்களை நிலைத்திருக்கச் செய்தது.

         அந்த அன்னை மரியாவைத் தான்,  தாய்த்திரு அவையினுடைய தாயாக நினைவு கூருகின்ற இந்நன்னாளில் நாமும் இந்த அன்னை மரியா வழியாக பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு நன்றி சொல்லுவோம்.  இந்த அன்னை மரியா வழியாக நாம் நம்பிக்கையில் வேரூன்றிய தருணங்களை நினைவு கூர்ந்து, கடவுளுக்கு நன்றி சொல்லுகின்ற மனிதர்களாக, அன்னை மரியாவை போல் நமது வாழ்வை ஆண்டவருக்கு அர்ப்பணித்தது போல, நாமும் அர்ப்பணித்து வாழ ஆண்டவரிடத்தில் அருள் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...