சனி, 3 ஜூன், 2023

தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்! (28-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

            இன்று தாய்த் திரு அவையாக இணைந்து நாம் பெந்தகோஸ்து திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இறப்புக்கு பிறகாக அஞ்சி நடுங்கி, பயத்தோடும் கலக்கத்தோடும் ஒரு மாடியறைக்குள் தங்களை அடைத்துக் கொண்ட இயேசுவின் சீடர்களுக்கும் மரியாவுக்குமாக கடவுளின் ஆவியார் அவர்கள் மீது இறங்கினார்.  நெருப்பு போன்ற ஒரு நாவடிவில் அவர்கள் மீது இந்த தூய ஆவியானவர் இறங்க, துணிவு பெற்றவர்களாக, எந்த இயேசுவை பற்றி அறிவிப்பதற்கு அஞ்சி நடுங்கி நான்கு சுவற்றிற்குள் தங்களை அடைத்துக் கொண்டார்களோ, அந்த சுவற்றினை கடந்து, எவரெல்லாம் அறிக்கையிடக்கூடாது என்று சொன்னார்களோ, அவர்களுக்கு மத்தியில் எல்லாம் நின்று துணிவோடு இயேசு என்று ஒரு மனிதன் இருந்தார். பல்வேறு நன்மைகளை செய்தார்.  கடவுளின் மகன் அவர்.  அவரை நீங்கள் கொன்றீர்கள். குற்றம் எதுவும் செய்யாத அவரை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று சொல்லி, துணைவோடு இயேசுவின் இறப்பை அறிக்கையிடுகின்ற மனிதர்களாக இந்த இயேசுவின் சீடர்கள் மாறினார்கள்.  இதற்கு அடிப்படை ஆவியானவரின் தூண்டுதல் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

   இந்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். நம் வாழ்வில் நாம் தோல்வியை சந்திக்கிற போதும், துவண்டு போகிற போதும், துன்பத்தில் மூழ்கி கிடக்கிற போதும் இந்த ஆவியானவர் நமக்குள் இருந்து துணிவை கொடுத்து எதிர்த்து நிற்பதற்கும் எதையும் சாதிப்பதற்குமான ஆற்றலை நமக்குள் தருகின்றார்.  இந்த ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நமது வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாக மாறுகிறது. நம்பிக்கை இழந்திருந்த சீடர்கள் ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆற்றலோடு இயேசுவின் பணியை செய்தது போல, நீங்களும் நானும் நமது வாழ்வில் நம்முள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து, அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக நமது வாழ்வை மாற்றிக்கொண்டு துணிவோடு இயேசுவின் இறையாட்சிப் பணியை இம்மண்ணில் செய்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...