வியாழன், 1 ஜூன், 2023

நான் உலகில் இருந்து உங்களை தேர்ந்தெடுத்து விட்டேன்! (13-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

          ஆண்டவர் இயேசுவின் பெயரால் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் பணியை செய்ய அழைக்கப்படுகிறோம். இந்த இயேசுவின் பணியை செய்கின்ற போது பல நேரங்களில் நாம் இன்னல்களையும் சந்திக்க நேரிடும்.  பலரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொள்ள நேரிடும். இந்த இயேசுவின் பணியை செய்வதன் காரணமாக பல்வேறு நன்மைகளும் நமக்கு கிடைக்கும். பல்வேறு துயரங்களும் சூழ நேரிடும். ஆனால் அனைத்து சூழ்நிலைகளிலும் ஆண்டவருக்கு உகந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதைத்தான் இன்று இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

      முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் செய்தியை அறிவிக்கச் சென்ற பவுலை திமொத்தேயு ஏற்று பராமரித்தது போல பல நேரங்களில் இயேசுவின் பெயரால் பலரும் பலவிதமான நன்மைகளை நமக்குச் செய்யலாம். அதே சமயம் இயேசுவின் பெயரை அறிவித்ததனால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளான சீடர்களைப் போல இயேசுவின் பெயரை அறிவிப்பதால் பல்வேறு துன்பங்களையும் நாம் சந்திக்க நேரிடலாம். துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் நாம் ஏற்றுக் கொண்ட இயேசுவின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...