சனி, 3 ஜூன், 2023

துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன். (22-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
        இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு பெரிதும் கவரப்பட்ட இயேசுவின் சீடர்கள், உமது பணியை செய்வோம் என்று சொல்லி உறுதிபாட்டை இயேசுவுக்கு தருகிறார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்மோடு இருந்தவர்களை நன்கு அறிந்தவர்.  எனவே அவர், நீங்கள் காலம் வருகிற போது என்னை விட்டுவிட்டு ஓடிச் செல்வீர்கள் என்று சொல்லி அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதையும் அறிவித்து, அவர்களை தன்னுடைய பணிக்கு தகுதி உடையவராக மாற்றுகின்றார். முதல் வாசகத்திலும் கூட இயேசுவின் பெயரால் ஈர்க்கப்பட்டு திருமுழுக்கு பெற்ற பலரும் கூட துன்பங்கள் வருகிற போது தொடக்க காலத்தில் இயேசுவின் பெயருக்கு எதிராக செயல்படுகிற நபர்களாக மாறினார்கள். ஆனாலும் சிலர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, அந்த நம்பிக்கையில் நிலைத்திருந்து இயேசுவுக்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தார்கள்.  

     இந்த இரண்டு வாசகங்களையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிற போது நாமும் இந்த இயேசுவை அறிந்திருக்கிறோம்; அவரின் வார்த்தைகளை அனுதினமும் கேட்கிறோம், வாசிக்கிறோம். கேட்ட வாசிக்கின்ற இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் இந்த இயேசுவின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் ஆழத்தை சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். துன்பங்களும் இடையூறுகளும் வருகிற போது விட்டுவிட்டு ஓடுகின்ற நபர்களாக இருந்துவிடாமல் இயேசுவுக்கு சான்று பகருகின்ற மனிதர்களாக இன்றும் என்றும் இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...