வியாழன், 1 ஜூன், 2023

வழியும் உண்மையும் வாழ்வும் நானே! (7-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


                 இன்றைய இறை வார்த்தையானது இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்திக் கொண்டு நம்பிக்கையோடு அனைத்து விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கிறது. 


   தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்தார்கள். இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு, இறை வேண்டலில் நிலைத்திருந்து ஜெபித்தவர்கள்.  ஆனால் தங்களுக்குள்ளாக சிலர் கவனிக்கப்படவில்லை என்ற சிக்கல்கள் எழுந்தபோதெல்லாம் திருத்தூதர்களை அவர்கள் நாடினார்கள். திருத்தூதர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலோடு அந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். 

         நாம் வாழுகின்ற இந்த சமூகத்திலும் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முயல்கிற போது பலவிதமான எதிர்ப்புகளையும் நிராகரிப்புகளையும் நாம் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.  இத்தகைய சூழல் வருகிற போதெல்லாம் இறைவனின் துணையை நாடித் தேடிய தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல, நாமும் நாடி  தேடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.  இறைவனின் துணையை நம்பி இறைவனின் துணையோடு அனைத்து விதமான இன்னல்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையோடு இயேசுவின் வார்த்தைகளை இம்மண்ணில் செயல் வடிவப்படுத்துகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...