வியாழன், 1 ஜூன், 2023

என்னுடன் இணைந்து இருந்தால் மிகுந்த கனி தருவீர்கள்! ( 10-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

               ஆண்டவரோடு இணைந்து இருப்பதற்கு இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நானே திராட்சை செடி; நீங்கள் அதன் கிளைகள் என்று சொல்லி, நம்மை அவரோடு இணைந்தவர்களாக காட்டுகின்ற இந்த இயேசுவை இதயத்தில் இருத்தியவர்களாக எப்போதும் அவரோடு இணைந்த வாழ்வை நாம் வாழ அழைக்கப்படுகிறோம். தொடக்க காலத்தில் இந்த இயேசுவை அறிவித்தவர்களும், இயேசுவின் பெயரால் ஒன்று கூடியவர்களும், இயேசுவோடு இணைந்து இருந்தார்கள். தங்கள் வாழ்வில் ஏற்பட்ட எல்லாவிதமான சிக்கல்களுக்கு மத்தியிலும் கூட அவர்கள் ஆண்டவரின் துணையோடு அனைத்தையும் எதிர் கொண்டார்கள்.

    இன்றைய முதல் வாசகத்திலும் கூட விருத்தசேதனம் செய்வதா? இல்லையா? என்ற விவாதம் எழுந்த போது தூய ஆவியாரின் துணையோடு திருஅவையில் இருக்கக்கூடிய அனைத்து திருத்தூதர்களின் உதவியை நாடி, அவர்களோடு கலந்துரையாடி இச்சிக்கலுக்கு தீர்வு காண முயற்சித்தார்கள். இயேசுவை துணை கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வில் வருகிற அத்தனை துயர்களிலும் இந்த இயேசுவின் துணையை நாடிச் சென்றது போல, அவரது அன்பில் நிலைத்திருப்பவர்கள் நாம் என்று மார்தட்டிக் கொள்ளக்கூடிய நாம் ஒவ்வொருவருமே நம் வாழ்வில் வருகின்ற எல்லாவிதமான இடையூறு இன்னல்கள் அனைத்திலும் இந்த ஆண்டவரோடு இணைந்தவர்கள் நாம் என்பதை இதயத்தில் இருத்தி அவரின் துணையோடு அனைத்தையும் எதிர்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...