சனி, 3 ஜூன், 2023

என் ஆட்டுக்குட்டிகளை பேணி வளர்! என் ஆடுகளை மேய்! ( 26-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவினிடத்தில் மூன்று முறை நீ என்னை அன்பு செய்கிறாயா? என்ற கேள்வியை எழுப்பி, பேதுரு கொண்டிருக்கின்ற நம்பிக்கையையும், அவரது புரிதலையும் அனைவரும் அறிந்து கொள்ளுகின்ற வகையில் எடுத்துரைக்கின்றார்.  இரண்டு முறை ஆம் இறைவா, நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று சொல்லியவராக, மூன்றாம் முறை தன்னை முழுவதுமாக அவரிடம் அர்ப்பணித்து, எல்லாம் உமக்குத் தெரியுமே என்று சொல்லி தன்னை முழுவதுமாக இயேசுவினிடத்தில் அர்ப்பணிக்கின்றார்.தன்னை முழுவதுமாக இயேசுவினிடத்தில் அர்ப்பணித்த பேதுருவை , "என்னை பின் தொடர்ந்து வா!" என்ற வார்த்தைகளை இயேசு கொடுக்கின்றார்.

         இந்த இயேசுவை அன்பு செய்கிறோம் என்று சொல்லக்கூடிய நாம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தருகின்ற அழைப்பு அவரை பின்தொடர்ந்து வா என்பதுதான்.  பேதுருவுக்கு தரப்பட்ட அந்த அழைப்பு இன்று நமக்கும் தரப்படுகிறது.  இந்த இயேசுவை அன்பு செய்கிறவர்கள் நாம் என்பதை சொல்லிலும் செயலிலும் வெளிகாட்டுகின்ற மனிதர்களாக நாளும் இந்த இயேசுவின் பாதையில் அவரைப் பின்தொடர்ந்து செல்ல இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...