சனி, 17 ஜூன், 2023

தம் சகோதர சகோதரிகளிடம் சினம் கொள்கிறவர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவார்! (15-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!


          கிறிஸ்தவர்களாகிய நம்முடைய நெறி மிகச்சிறந்த நெறியாக  இருக்க வேண்டும் என்பது இன்றைய இறைவார்த்தை நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடமாக இருக்கிறது.  அது என்ன நமக்கான நெறி? என்று கேள்வியை எழுப்புகிற போது இயேசுவை அறிந்து அவரின் வழித்தடங்களில் பயணிக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே அவரைப் போல இந்த சமூகத்தில் வாழ வேண்டும். 

       மன்னியுங்கள் என்று சொன்ன இயேசு, மன்னிப்பவராக உயிர் விடுகின்ற நேரத்திலும் தன் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தார்.  இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு அவர் மீதான நம்பிக்கையில் நாளும் வளர்ந்து கொண்டிருக்க கூடிய நீங்களும் நானும், இந்த இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இதயத்தில் இருத்தியவர்களாக, அவ்வார்த்தைக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். தூய ஆவியானவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்கான ஆற்றலைத் தந்து நம்மை வழிநடத்துவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இந்த நாளில் இனிதாய் பயணிப்போம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...