சனி, 3 ஜூன், 2023

வெளிப்படுத்தும் தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்! (17-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

    உண்மையை எடுத்துரைக்கும் தூய ஆவியானவர் நம்முள் இருக்கிறார்.  அவரின் குரலுக்கு செவி கொடுத்து இந்த சமூகத்தில் உண்மையை நிலை நாட்டுகின்ற மனிதர்களாக, உண்மையை சார்ந்து வாழுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம்.

     அன்று ஏதேன்ஸ் நகருக்கு சென்ற பவுலும் அவரது உடன் உழைப்பாளர்களும்,  அறியாத தெய்வத்திற்கு நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உண்மை தெய்வத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று சொல்லி இயேசுவை எடுத்துரைத்து, அவர்களின் வாழ்வு நெறிப்பட உதவினார். இந்த உண்மை தெய்வத்தை அவர்கள் உணர்ந்து கொண்டது இந்த தூய ஆவியாரின் தூண்டுதலால். நம்முள் இருந்து செயலாற்றுகின்ற தூய ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுக்கிற போது நம் வாழ்வும் உண்மை நிறைந்த வாழ்வாகவும், இச்சமூகத்தில் உள்ள உண்மைகளை கண்டுகொள்ளுகின்ற வாழ்வாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நம்முள் இருக்கின்ற ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து, நம் செயல்களை அமைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் உண்மையின் மக்களாக வாழ்வதற்கு இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...