வியாழன், 1 ஜூன், 2023

வழியும் உண்மையும் வாழ்வும் நானே! (5-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
             இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவன் மீது நம்பிக்கையோடு நாம் இந்த அகிலத்தில் பலவிதமான பணிகளை செய்வதற்கு அழைக்கப்படுகிறோம். கடவுளின் துணையோடு நாம் செய்கிற அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, வாழ்வு தருகின்ற இறைவனை பின்பற்றிக்கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்து இயேசுவுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...