வியாழன், 1 ஜூன், 2023

தூய ஆவியார் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்! (8-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

              இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் கடவுளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்ற அன்பு கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருமே அவரின் கட்டளைகளை கடைப்பிடிப்பார்கள் என இயேசு குறிப்பிடுகின்றார். இந்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த காரணத்தினால் தான் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் பெயரால் எத்தனையோ அருள் அடையாளங்களை செய்தார்கள்.

          இன்றைய முதல் வாசகத்தில் கூட திருத்தூதர் பவுல் கால் ஊனமுற்றிருந்த ஒரு நபரை நடக்க வைக்கின்ற ஒரு நிகழ்வினை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  எப்படி சாதாரணமான பவுலால் இதை செய்ய இயன்றது என்ற கேள்வியை எழுப்புகிற போது, அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையும் அன்பும் தான் இயேசுவின் வழியாக இப்புதுமையைச் செய்ய அவருக்கு ஆற்றலை தந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    இந்த இயேசுவின் பெயரால் ஒன்று கூடி இருக்கின்ற நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையும் அன்பும் கொண்டவர்களாக, நாளும் அவரது அன்பு உறவில் நிலைத்திருந்து, அவர் வழியாக அவரின் பெயரின் வண்ணமாக பல்வேறு அரும் செயல்களை செய்வதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...