சனி, 17 ஜூன், 2023

இயேசுவின் திரு இருதய பெருவிழா!(16-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

தாய்த் திரு அவையானது இன்று திரு இருதய ஆண்டவரின் பெருவிழாவினை கொண்டாட அழைப்பு விடுக்கிறது. ஜூன் மாதம் என்றாலே திரு இருதய ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம் என்று சொல்லுவார்கள். இந்த மாதத்தில் பலரும் தங்கள் வீடுகளில் வைத்திருக்கிற திரு இருதய ஆண்டவர் படத்தை புதுப்பிப்பது வழக்கம். 

      இந்த திரு இருதய ஆண்டவர் நம் குடும்பங்களை தமது திரு இருதயத்தில் வைத்து பாதுகாப்பார் என்பது நமது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிமித்தமாக இன்றைய இறை வார்த்தையை உற்று நோக்குகிற போது கடவுள் நம்மீது எந்த அளவிற்கு அன்பு கொண்டார் என்பதை முதல் வாசகம் சுட்டிக்காட்டுகிறது. 

          இரண்டாம் வாசகத்திலும் அந்த அன்பினை நாம் ஒருவர் மற்றவரோடு பகிர வேண்டும் என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது. 

    இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மோடு இருப்பவர்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்யவும், இரக்கம் காட்டவும், அவர்களுக்கான நல்லதை செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கவும் இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். 

         இயேசுவின் இருதயத்திலிருந்து பொழியப்படுகின்ற அன்பு நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாப்பது போல நாமும், அன்பால்  இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொருவரோடும் இணைந்து இறைவனை புகழ்வதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...