வியாழன், 1 ஜூன், 2023

என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்! (9-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                      அமைதி என்பதை கூட சத்தமாக சொல்லுகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு அமைதியை தருவதாக இன்று இறை வார்த்தை வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார். ஆண்டவர் தருகின்ற அமைதியை நாமும் அடுத்தவருக்கு தருகின்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக்கொள்ள அழைக்கப்படுகிறோம்.  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் அமைதியை விரும்புகிற நபர்களாகவும், அமைதியை அடுத்தவர்களுக்கு கொடுக்கின்ற நபர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.  அடுத்தவர் மீதான போட்டி பொறாமையோடு அவர்களின் வாழ்வை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் செய்கிற ஒவ்வொரு செயல்களும் அடுத்தவர் வாழ்வில் அமைதியை அழிக்கின்றது.  நாம் அடுத்தவர் வாழ்வில் அமைதியை உருவாகும் சூழலை உருவாக்கும் வண்ணமாக,  நமது சொல்லிலும் செயலிலும் வழியாக அடுத்தவர் வாழ்வில் அமைதி மேலோங்குவதற்கு வழி வகுத்து கொடுக்கின்றவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.  இயேசுவின் சீடர்கள் இத்தகைய ஒரு வழியையே பின்பற்றினார்கள்.  சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அமைதியை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இயேசுவின் சீடர்களை பின்பற்றி இயேசுவை அறிந்து கொண்ட நாம் ஒவ்வொருவருமே அமைதியை அடுத்தவர் வாழ்வில் மேலோங்குவதற்கான வழிகளை காட்டுபவர்களாகவும், அதற்கேற்ற வகையில் நமது செயல்களை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களுமாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...