செவ்வாய், 6 ஜூன், 2023

அவர் வாழ்வோரின் கடவுள்! (7-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 வாழ்வில் வருகின்ற எல்லா இடர்பாடுகளிலும் கடவுளை நாடித் தேடுகின்ற மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற தோபித்தும் சாராவும் வாழ்வுக்கான பாடமாக நமக்கு கொடுக்கின்றார்கள்.  இந்த தோபித்தையும் சாராவையும் இதயத்தில் இருத்திக்  கொண்டு கடவுளால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இந்த மண்ணில் நம்மால் இயன்ற நன்மைகளை மற்றவருக்கு செய்வோம். ஒருவேளை நன்மை செய்தும் துன்பமே நமக்கு பரிசாக கிடைத்தாலும் துணிவோடு கடவுளின் துணையை நாடுவோம்.

        நம்மைக் காக்க நம்மோடு இருக்க, அவர் அனுப்பிய காவல் தூதர்கள் நம்மை பாதுகாப்பார்கள்; வழி நடத்துவார்கள். அவர்களின் பாதுகாப்பிலும் வழி நடத்தலின் அடிப்படையிலும் துன்பங்களுக்கு மத்தியிலும் கடவுளின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி, அவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...