செவ்வாய், 13 ஜூன், 2023

பதுவை நகர் புனித அந்தோணியார்! (13-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்

தாய் திரு அவையோடு இணைந்து இன்று நாம் புனித பதுவை நகர் அந்தோனியாரை நினைவு கூர அழைக்கப்படுகின்றோம். இன்றைய வாசகங்களில் கூட கடவுள் உண்மையுள்ளவர் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. இந்த உண்மையான கடவுளை அறிவிப்பது மட்டுமே தன் வாழ்வின் இலக்கு என கருதிய ஒரு மனிதனாக , இயேசுவைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்க கூடியவராக, அறிவித்து, அப்படி அறிவித்ததன் பயனாக அழியா நாக்கோடு இன்றும் நம் மத்தியில் நினைவு கூரப்படுகின்ற பதுவை நகர் புனித அந்தோணியாரின் திருவிழா வாழ்த்துகளை உங்களுக்கு  உரித்தாக்குகிறேன். நாம் அறிந்த நிலையில் புனித அந்தோனியாரின் நாமத்தை தாங்கியவர்களுக்கு இன்றைய நாளில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம். 

                இந்த அந்தோணியார் இந்த மண்ணில் வாழ்ந்த போது, இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப உப்பாகவும் ஒளியாகவும் விளங்கினார். 


      உப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று உணவில். ஆனால் அது இருப்பது பெரிய அளவிற்கு வெளியில் தெரியாது. ஆனாலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதுபோலவே அந்தோணியார் என்பவர் ஒரு சிறிய மனிதராக இருந்தாலும் கூட , நம்பிக்கை நிறைந்த மனிதர்களுக்கு இவர் பல நன்மைகளை செய்தார் என்றும், கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையினால் பலவிதமான அரும் செயல்களை செய்தார் என்றும் இவரைக் குறித்து இவரது வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். 


  இந்த அந்தோனியாரை நினைவு கூருகின்ற இன்றைய நன்னாளில், நாமும் அந்தோணியாரைப் போல ஆண்டவர் இயேசுவை அறிக்கையிட்டு மற்றவர்களும் நம்மிடமிருந்து ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள இந்த உலகில் நல்லதொரு ஒளியாக செயல்படுவதற்கான ஆற்றல் வேண்டுவோம். அந்தோணியாரின் வழியாக நம்பிக்கையில் இன்னும் ஆழப்படவும், உப்பாகவும் ஒளியாகவும் இயேசுவை அறிவிப்பதில் விளங்கவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...