சனி, 3 ஜூன், 2023

தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுப்போம்! (15-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

             கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பதற்காக ஒரு துணையாளரை தருவேன் என்று சொல்லி தூய ஆவியாரை நமக்கு தந்திருக்கிறார். இந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். இந்த தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து வாழுகிற போது நாம் கடவுளிடமிருந்து பல நன்மைகளை பெற்றுக் கொள்வோம் என்பதற்கு சான்றாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது.

    ஜெபிப்பதற்கான ஒரு இடத்தை தேடியும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி பணியை தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப செய்து கொண்டிருந்த பவுலும் அவரின் உடன் உழைப்பாளர்களும், தங்க இடம் யார் தருவார் என்ற எண்ணத்தோடு இருந்த போது, இவர்களின் பேச்சை கேட்டு இவர்களின் வார்த்தைகளால் கவரப்பட்ட லீதியா என்ற பெண் ஆனவள் இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து உபசரிக்கின்றாள்.

                  தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற போது நாம் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்வோம் என்பதற்கு சான்றாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது. நம்மிலிருந்து செயலாற்றுகின்ற இந்த ஆவியானவரின் குரலுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு தூய ஆவியாரின் துணையோடு பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...