சனி, 3 ஜூன், 2023

அனைவருக்காகவும் மன்றாடுவோம் ! (25-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு பலவற்றை கற்பித்திருந்தாலும், மற்றவர்களுக்காக வேண்டவும் அவர் கற்றுக் கொடுத்தார்.  அதன் அடிப்படையில் தான் தன்னுடைய வார்த்தைகளை கேட்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்களுக்காக ஆண்டவர் மன்றாடியதையும் தன்னுடைய வார்த்தைகளை கேட்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு இதனை அறிவிக்கின்ற போது, அதை கேட்கிற நபர்களும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு , நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் இறைவேண்டல் செய்ததை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம்  வாசிக்க கேட்டோம்.  இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கிற போது,  நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் எத்தனை பணிகள் இருந்தாலும் அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் நாம் அடுத்தவருக்காக மன்றாட வேண்டும் என்பதை  இதயத்தில் இருத்திக் கொள்வோம்.  நாம் செய்கின்ற நன்மைத்தனங்களையும், நாம் சொல்லுகின்ற நல்லவற்றையும் கேட்டு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். எனவே எதை செய்தாலும்  இறைவனை முன்னிறுத்தி, இறைவனின் துணையோடு செய்வதற்கான ஒரு ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...