இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
கடவுளுக்குரிய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க, கடவுளின் கட்டளைகளை பின்பற்றுவதற்கு இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் அழைக்கப்படுகின்றோம். கட்டளைகளை பின்பற்றுகிற ஒவ்வொரு மனிதனுமே விண்ணகத்தில் பெரிய மனிதராக இருப்போம் என்று இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் இம்மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாளும் நாம் அறிந்த இயேசுவை அறிக்கையிடவும், அவரிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக இம்மண்ணில் செயல்படுத்தவும் ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக