சனி, 3 ஜூன், 2023

மூவொரு இறைவன் பெருவிழா! (4-6-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 
         இன்று தாய்த் திரு அவையானது, மூவொரு இறைவனின் புகழை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது.  தந்தை மகன் தூய ஆவி என்ற மூன்று நபர்களாக செயல்பட்டாலும், ஒரே ஞானத்தோடு, ஒரே சித்தத்தோடு, ஒரே வல்லமையோடு அவர்கள் இருந்ததை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

     நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் மனிதர்களாக இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் எண்ணத்தாலும், செயலாலும், வேறுபட்டு இருந்தாலும், கடவுளுக்கு உகந்தவற்றை எப்போதும் நாடித் தேடுகின்ற மனிதர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணமாக இந்த மூவொரு இறைவனை நாம் எடுத்துக்கொள்கிறோம். ஆள் நபரில் அவர்கள் வேறுபட்டாலும், இறை ஞானத்தோடு ஒவ்வொரு நாளும், ஒரே சிந்தனையோடும் ஒரே சித்தத்தோடும் இருந்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். கடவுளின் எண்ணத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபராக இயேசுவும், இயேசுவை வழிநடத்துகின்ற நபராக தூய ஆவியாருமாக இருந்து, நமக்கொரு முன் உதாரணமாக இவர்கள் விளங்குகிறார்கள். இவர்களை இதயத்தில் இருத்திக் கொண்டு நமது வாழ்வை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம். 
    ஒவ்வொரு நாளும் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் கடவுளின் எண்ணத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நாம் இருக்கிறோமா?  செயல் வடிவம் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு நம்மை உள்ளிருந்து தூண்டுகின்ற தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற மனிதர்களாக இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்த்து, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, மூவொரு இறைவனைப் போல நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் இணைந்து, இறைவனுடைய எண்ணத்திற்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...