வியாழன், 1 ஜூன், 2023

என்னை காண்பது, தந்தையை காண்பது ஆகும்! (6-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
           ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது தான் எப்படியெல்லாம் வாழ்ந்து காண்பித்தாரோ அதன்படி ஒவ்வொருவரையும் வாழ அறிவுறுத்தினார்.  குறிப்பாக தன்னுடைய சீடர்களிடத்தில் தான் தந்தையின் திருவுளத்தை  அறிந்து அதனை நிறைவேற்றுகின்றவராக இருப்பது போல, நீங்களும் இருக்க வேண்டும் என்பதை அவர் அவர்களுக்கு எடுத்துரைத்தார். 

    இயேசுவின் வார்த்தைகளை கேட்ட இயேசுவின் சீடர்கள் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்ந்த போது ஒவ்வொரு நாளும் இந்த இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை எல்லாம் தங்கள் நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு, இயேசுவுக்கு சான்று பகருகின்ற மனிதர்களாக இந்த மண்ணில் வாழ்ந்து நமக்கு நல்லதொரு முன்மாதிரிகளாக திகழ்ந்தார்கள்.  இவர்களைப் போலவே நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம்.

     நாம் அறிந்த இயேசுவை இதயத்தில் இருத்தி நமது செயல்கள் ஒவ்வொன்றையும் இந்த இயேசுவுக்கு உகந்த செயல்களாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இச்சமூகத்தில் பயணிக்க இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...