சனி, 3 ஜூன், 2023

நீங்கள் துயருறுவீர்கள். உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்! (18-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                இன்றைய இறை வார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னோடு இருக்கின்ற  சீடர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது இறப்பை உணர்ந்தவராக, நான் உங்களை விட்டு செல்ல வேண்டிய காலம் வருகிறது. நீங்கள் என்னை தேடுவீர்கள். ஆனால் நான் உங்கள் மத்தியில் இருக்க மாட்டேன் என்று சொல்லி, அந்நேரங்களில் எல்லாம் கலங்கிட வேண்டாம், துணிவோடு இருங்கள், துணிச்சல் பெற்றவர்களாக இருங்கள். எத்தகைய இடர்பாடுகள் உங்கள் வாழ்வில் வந்தாலும் அத்துணை இடர்பாடுகளையும் எதிர்த்து நில்லுங்கள் என்று சொல்லி, தன்னுடைய சீடர்களை ஊக்கப்படுத்துகின்ற நிகழ்வை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    இந்த ஊக்கம் தான் ஆண்டவர் இயேசுவின் பெயரை அறிக்கை இட்ட ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது. எத்தனையோ இன்னல்களை தங்கள் வாழ்வில் அவர்கள் சந்தித்தபோதும் கூட, தளரா மனதோடு ஆண்டவரின் பணியை செய்கிறோம் என்பதில் நிலைத்திருந்தவர்களாக துணிவோடு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை துன்பங்களுக்கு மத்தியிலும் அறிவித்தார்கள். நாமும் இவர்களைப் போல துன்பங்களுக்கு மத்தியிலும், இயேசுவின் நற்செய்தியை பாரெங்கும் உள்ள மக்களுக்கு அதிலும் குறிப்பாக  இயேசுவை அறியாத மக்களுக்கு அறிவிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நற்கனி கொடுக்கும் மரங்களாக வளர்வோம்! (26-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...