வெள்ளி, 23 அக்டோபர், 2020

மனமாற்றம் ஒன்றே. (24.10.2020)

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கு ஏற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.

இறைவன் இயேசுவின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! 
நாம் அனைவரும் ஒன்றிணைந்து திருத்தொண்டாற்றும் பணியில் இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் அதன் வழியாக கிறிஸ்துவின் உடலை கட்டி எழுப்பவும், புனித பவுலின் வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். கிறிஸ்துவின் உடலைக்கட்டி எழுப்புதல் என்பது நான் மட்டும் தனித்து நின்று செயல்படுகின்ற ஒரு காரியமல்ல. மாறாக, ஆண்டவர் நமக்கு அளித்த அருளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஆண்டவரின் பணிக்கு நம்மை ஆர்வத்துடன் ஆயத்தப் படுத்த வேண்டும். அன்பின் அடிப்படையில் உண்மை பேசி தலையாகிய கிறிஸ்துவை போன்று எல்லாவற்றிலும் வளர வேண்டும் என்று புனித பவுல் குறிப்பிடுகின்றார். 

ஒருவர் தன்னுடைய தலையான சிந்தனை திறத்தால் தன்னுடைய செயல்பாடுகள் வழியாக, தன்னுடைய வார்த்தைகளின் வழியாக, தன்னுடைய முயற்சிகளின் வழியாக, தன்னுடைய ஆறுதல்படுத்தும் வார்த்தைகளின் வழியாக, தீமையைக் கண்ணுறும் போது வெளிப்படும் அறச் சினத்தின் வழியாக, ஒரு ஏழையை கண்ணுறும் போது அவர் மீது இரக்கப்பட்டு உதவி செய்தல் வழியாக, இன்று இவ்வாறாக பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றார். 
இன்று நன்மையா அல்லது தீமையா எதுவாயினும் ஒவ்வொரு மனிதரும் எதையாவது செய்து  கொண்டே இருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவன் காட்டும் நெறிமுறைகளுக்கு ஏற்ப இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ்ந்திட ஆண்டவர் இயேசு நம்மை அழைக்கின்றார்.

நாம் இறைவனுக்கு செலுத்துகின்ற பலிகள், நம்முடைய செல்வங்களை இறைவனிடத்தில் கொட்டினாலும்,  ஆண்டவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லி ஆலயங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஆண்டவர் இயேசு நம்மிடம் விரும்புவது உண்மையான மனமாற்றம் ஒன்றே. 

 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை. என்று
லூக்கா 6:44 இறை வசனம் கூறுவது போல, நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்த அருளுக்கேற்ப உள்ளத்தில் இறைவனை தாங்கியவர்களாய், உண்மையான மன மாற்றத்துடன் வாழ்ந்திட இன்றைய நாளில் நமது மனங்களை செம்மைப்படுத்துவோம். ஆண்டவருக்கு உகந்த பிரியமுள்ள காணிக்கையாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.

1 கருத்து:

  1. உண்மையான மனமாற்றம் அடைந்திட ஆண்டவர் இயேசுவை உள்ளத்தில் வரவேற்போம்! அவரது பிரசன்னத்தில் நம்மை உருமாற்றுவோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...