வியாழன், 1 அக்டோபர், 2020

காவல் தூதரை நோக்கி செபம்

அதிமிக பிரமாணிக்கமுள்ள காவலரே ! அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே! இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும் செயலினாலும் உம்மை விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் செய்யவும் விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து, சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். 

ஆமென்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...