ஞாயிறு, 25 அக்டோபர், 2020

நல்லதை விரும்புவோம் (26.10.2020)

நல்லது செய்வோம் நல்லதை விரும்புவோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் உங்களிடம் எனது சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


நாம் நல்லது செய்யவும், நல்லதை விரும்பவும் இன்றைய வாசகங்கள் வழியாக இயேசு நம்மை அழைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உடல்நலமற்ற ஒருவரை நலமாக்குகிறார்.

ஒருவருக்கு நலம் அளிப்பது என்பது மிகவும் நல்லது. இந்த பணியை செய்வதால் இயேசுவின் மீது குற்றம்சாட்ட கூடிய நபர்களை நாம் இன்ற வாசகத்தில் காண்கின்றோம். 
 
ஓய்வு நாளில் சட்டத்தை இயேசு மீறியதாக  குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஓய்வுநாள் என்பது மனிதனுக்காகவே, மனிதனுக்கு நலம் தரும் செயல்களை செய்வதை ஓய்வுநாள் எப்போதும் தடுப்பதில்லை. தவறான எண்ணத்தையும், தவறான சட்டத்திற்கான விளக்கத்தை மனதில் கொண்டு வாழ்ந்த சமூகத்தில் இயேசு மாற்றுச் சிந்தனையை விதைக்கிறார்.

நாம் வாழக்கூடிய சமூகத்தில் நாம் நலமான பணிகளை செய்ய முன்வரும் போது நம்மில் பலர் பெரும்பாலும் அதை குற்றம் நோக்கத்தோடு காண்பதுண்டு.  ஒருவரை தவறானவர் என குற்றம் சாட்ட வேண்டும் என முடிவு செய்த பிறகு அந்த நபர் எத்தனையோ நல்ல செயல்களை செய்தாலும் அதில் குற்றம் காண கூடியவர்களாக நாம் இருப்போம்.  

இயேசு வாழ்ந்த காலத்திலும் இதுதான் நடந்தது.   நேர்மையாளரான இயேசு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிலுவை மரணத்திற்கு கையளிக்கப்பட்ட நிகழ்வவை நாம் அனைவரும் அறிந்ததே.  

உண்மையை பேசுவதாலும், நன்மையை செய்தாலும் குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இயேசு செய்த நல்லதை விடுத்து விட்டு, அவர் செய்த நல்ல காரியங்களில் இருந்து கூட அவர் மீது எப்படி குற்றஞ்சாட்டலாம் என்ற எண்ணத்தோடு அவரைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தார்கள். இதையே இன்றைய வாசகத்தின் வழியாக நாம் உணருகிறோம்.  

நமது வாழ்க்கையின் நலமான காரியங்களைச் செய்ய முன்வரும் போதும், ஏன்  நாமும் பெரும்பான்மையான நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை சந்திப்பது உண்டு. ஏன் நாமே இப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பதும் உண்டு.
ஏன் நாமே சில நேரங்களில் சிலரை தவறானவர்கள் என்று எண்ணம் கொண்டு அவர்கள் செய்யக் கூடிய சிறு நல்ல செயல்களை கூட புரிந்து கொள்ளாமல், அதிலிருந்து அவர்கள் மீது குற்றம் சாட்ட கூடியவர்களாகவும், அவர்களை விமர்சனம் செய்பவர்களாகவும் நாம் இருக்கிறோம். நமது செயல்களை சிந்தித்து பார்த்து, நாம் நம்மை சரி செய்துகொள்ளவும், நல்லதைச் செய்யவும், நல்லது செய்வதை விரும்பக் கூடியவர்களாக நாம் வாழ இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...