புதன், 2 நவம்பர், 2022

அனைத்து புனிதர்கள் பெருவிழா (1-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து நாம் அனைத்து புனிதர்களின் பெருவிழாவினை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளில் நாம் புனிதர்களை குறித்து சிந்திப்பதற்கு அழைக்கப்படுகின்றோம். மனிதர்களாக இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், புனிதர்கள் என அழைக்கப்படக்கூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். இந்த புனிதர்கள் எல்லோருமே நம்மை போல சாதாரணமான மனிதர்கள் தான். இந்த மண்ணில் வந்த போது நம்மைப் போல இன்ப துன்பங்களை தங்கள் வாழ்வில் சந்தித்தவர்கள். 
ஆனால் இன்ப துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்குவதே தங்கள் வாழ்வின் இலக்கு எனக் கருதி, அந்த இலக்கினை நிறைவேற்றக்கூடிய பயணத்தில், எல்லாவிதமான இடர்பாடுகளையும் ஏற்றுக் கொண்டு, ஆண்டவர் இயேசுவை அறிவிக்க கூடியவர்களாகவும், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களுமாக, இருந்தார்கள் என்பதை நாம் புனிதர்களின் வாழ்வில் இருந்து அறிந்து கொள்கிறோம். 

இன்றைய நாளில் மனிதர்களாக இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, நாமும் புனிதர்கள் என்ற நிலைக்கு உயர்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் இறைவனால் நமக்கு தரப்பட்டிருக்கிறது. எனவே நமது வாழ்வை அடுத்தவருக்கு உகந்த ஒரு வாழ்வாக மாற்றி , ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை அறிவிக்கவும், அதனை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாக நாமும் இந்த மண்ணில் வலம் வந்து, 
மனிதர்களாகிய நாம் புனிதர்களாக மாறிட இன்றைய நாளில்
 இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...