செவ்வாய், 22 நவம்பர், 2022

அவர் வாழ்வோரின் கடவுள்! (19-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் மண்ணில் வாழ்ந்து, பலவிதமான காரியங்களை செய்து இந்த மண்ணில் பலரால் கொலை செய்யப்பட்டு, இறந்து போனார். இறந்த இயேசு மூன்றாம் நாள் சொல்லியபடி உயிர்த்தெழுந்தார். இந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக ஒவ்வொரு நாளும், நமது வாழ்வை நாம் அமைத்திருக்கிறோம். 
             இந்த உயிர்ப்பில் நம்பிக்கையற்ற மனிதர்கள் இயேசுவினிடத்தில் பல நேரங்களில் பலவிதமான உவமைகளின் வாயிலாக சட்டங்களின் அடிப்படையில், கேள்விகளை எழுப்பிய போது கூட, உயிர்ப்பு என்பது உண்டு என்பதை இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். உயிர்ப்புக்குப் பிறராக நாம் எத்தகைய ஒரு உடலோடு இருப்போம்? எப்படிப்பட்ட நிலையில் இருப்போம் என்பதையெல்லாம் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக அவர் தெளிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உயிர்ப்பில் பங்கெடுக்க வருகின்ற நாம் ஒவ்வொருவருமே, அவருக்கு உகந்த ஒரு வாழ்வினை வாழ கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் நமது செயல்பாடுகள் அமைகிறதா?  என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்தவர்களாய்,  மண்ணில் வாழ்கிற போது இயேசுவைப் போல, இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...