செவ்வாய், 22 நவம்பர், 2022

என் தாயும் சகோதர சகோதரிகளும் இவர்களே! (21-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்று இயேசுவின் கேள்வியை வைத்து அன்னை மரியாவை புறம் தள்ளுகின்ற போக்கானது இன்று நம்மில் பலரிடத்தில் மேலோங்கி இருப்பதை நாம் காணலாம்.  ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை வெறும் கேள்வியோடு  நிறுத்தி விடாமல், அதனை கடந்து, இறைவார்த்தையை முழுமையாக வாசித்து, அன்னை மரியாவை குறித்து இயேசுவின் பார்வை, இயேசுவின் வார்த்தைகள் என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ள நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம். இறை வார்த்தையை கேட்டு அதன்படி தம் வாழ்வை அமைத்துக் கொள்பவரே, என் தாயும் சகோதரரும் என, இயேசு குறிப்பிடுகின்றார். அன்று கபிரியேல் தூதரின் வழியாக கடவுளின் வார்த்தை அறிவிக்கப்பட்ட போது, நான் ஆண்டவரின் அடிமை என்று சொல்லி கடவுளின்   வார்த்தைக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து, தன் வாழ்வையே கொடுத்த அன்னை மரியாவின் மகத்துவத்தை, இயேசு கிறிஸ்து அனைவரும் உணர்ந்து கொள்ள கூடிய வகையில் தெளிவுபடுத்தி இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். நீங்களும் நானும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களாக இருப்பதற்கான எளிய வழி, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக மட்டுமே அமைகிறது. 
                    நமது வாழ்வை ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வாழ்வாக அமைத்துக் கொள்ளுவோம். ஆண்டவர் இயேசுவின் சகோதரர்களாக மாறிட, இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...