வியாழன், 10 நவம்பர், 2022

போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்! (11-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


               தொடக்கத்திலிருந்தே ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்பு செய்யவும், ஒருவர் மற்றவரோடு அன்பு உறவில் நிலைத்திருக்கவும் வலியுறுத்தக் கூடியவராக இருக்கின்றார். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இந்த அன்பை அடுத்தவரோடு பகிர்கின்ற மனிதராக, தான் இருந்தது மட்டுமல்லாமல் தன்னோடு இருந்தவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என  வலியுறுத்தக் கூடியவராக இருந்தார். இன்றைய முதல் வாசகத்தில், பவுலும் அந்த அன்பு உறவில் நிலைத்திருப்பதற்கான வலியுறுத்தலை வழங்குவதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். 

               இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட தொடக்கத்திலிருந்து பாவம் இந்த மண்ணில் பெருகிய போதெல்லாம், கடவுள் கோபம் கொண்டவராய் பலவிதமான அழிவுகளை இந்த உலகில் நிகழ்த்திய போது கூட, கடவுளின் அன்புக்குரியவர்கள் இருக்கத்தான் செய்தார்கள். 
           கடவுளின் அன்பானது இந்த உலகில் இருந்த பல நல்ல மனிதர்கள் மீது இருந்து கொண்டு இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளும் வண்ணமாக, இயேசு தொடக்க காலத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் சுட்டிக் காண்பித்து, நோவாவின் காலத்தில் நோவா காப்பாற்றப்பட்டது போல, லோத்தின் காலத்தில் லோத்து காப்பாற்றப்பட்டது போல, நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு, கடவுள் விரும்புகின்ற மனிதர்களாக, நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகின்ற போது நமது வாழ்வும் ஆண்டவரால் காப்பாற்றப்படுகின்ற ஒரு வாழ்வாக அமையும் என்பதை இதயத்தில் இருத்திக் கொண்டவர்களாய், இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக, இருக்கின்ற நாள் வரை அன்பைப் பகிர்ந்து அன்போடு வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசீர்வதிப்பார். 




     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...