புதன், 9 நவம்பர், 2022

நான் மனம் மாறி விட்டேன் என்று சொல்வாரானால், அவரை மன்னித்து விடுங்கள்! (7-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வாழுகின்ற நமது வாழ்வானது, மற்றவருக்கான முன்மாதிரியான வாழ்வாக அமைய வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நம்மை பார்த்து வளர்கின்ற மனிதர்களுக்கு முன்மாதிரிகளாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது.

ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, நன்னயம் மிக்க மனிதர்களாக, நல்லது செய்பவர்களாக, மற்றவர்களுக்கு நல்லதை சொல்லித் தரக்கூடிய மனிதர்களாக, இந்த சமூகத்தில் வலம் வர இறைவார்த்தை வாயிலாக இறைவன் அழைப்பு தருகின்றார். 

நமக்கு எதிராக குற்றம் செய்கின்ற மனிதர்களை மன்னிக்கின்ற மனம் படைத்த மனிதர்களாகவும், நம்பிக்கையோடு கடவுளின் வார்த்தையை பின்பற்றுகின்ற மனிதர்களாகவும், நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறைவன் இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு அறிவுறுத்துகிறார். 

இந்த இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்த மனிதர்களாக, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இந்த இயேசுவை பின்பற்றுகிறேன் என்று வார்த்தை அளவில் சொல்லுவதை விட, இந்த இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...