செவ்வாய், 15 நவம்பர், 2022

இழந்து போனதை தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்! (15-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

        இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் விழிப்பாய் இருப்பதற்கான அழைப்பு தரப்படுகிறது. ஆண்டவர் இயேசுவின் வருகை எப்போது என அறியாதிருக்கின்ற  சூழ்நிலையில், நாம் எப்போதும் ஆயத்த நிலையில் விழிப்போடு  இருக்க  அழைக்கப்படுகின்றோம். நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்த்தவர்களாய், நம்மிடம் இருக்கின்ற தீய எண்ணங்களை களைந்து எறிந்தவர்களாய், சக்கேயுவைப் போல மன மாற்றம் பெற்ற மனிதர்களாக, நாம் ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்ளவும்,  அவரைக் காண ஆவல் கொண்டவர்களாய், அவரை காணுகின்ற போது அவரை எதிர்கொள்வதற்கு நமது வாழ்வை நாம் தகுதியுள்ளவர்களாய் மாற்றிக்கொண்டு, அவருக்கு உகந்த மனிதர்களாக அவரை எதிர் கொள்வதற்கான ஆற்றல் வேண்டி
 இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...