செவ்வாய், 22 நவம்பர், 2022

அமைதிக்கான வழியை அறிந்திருக்கிறோமா? (17-11-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

        
இன்றைய முதல் வாசகமானது, திரு வெளிப்பாட்டு நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும், இறுதி நாட்களில் என்ன நடக்கும் என்பது குறித்தும் இந்த புத்தகத்தில் யோவான் கண்ட காட்சியில் குறிப்பிடப்படுகின்றன. 

      இந்தக் காட்சிகள் அனைத்துமே நமக்கு வலியுறுத்துவது, ஆண்டவர் இயேசுவின் நாள் வருகிற போது, அவரை எதிர்கொள்ள நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, நமக்கு வலியுறுத்துகின்றன. 

            இன்றைய   நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து, எருசலேம் தேவாலயத்தின் அழிவை பற்றி பேசுகிறார். தேவாலயத்தின் அழிவு என அதை பார்ப்பதை விட, இந்த ஆலயத்தை நம்பிக்கொண்டு அதில் இருக்கின்ற சமய சடங்குகளை மட்டுமே பின்பற்றுவதில் தங்கள் வாழ்வு அடங்கி இருக்கிறது என வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு, இந்த சமயச் சடங்குகளை எல்லாம் கடந்த நிலையில், ஆண்டவர் இயேசுவின்  வார்த்தையை வாழ்வாக்குவதே வாழ்வின் இலக்கு என்பதே இயேசு எடுத்துரைக்கும் வண்ணமாக, இன்றைய நற்செய்தி வாசகம் அமைகிறது.
                    இந்த நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் , நமது வாழ்வை இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட ஒரு வாழ்வாக மாற்றிக்கொண்டு, ஆண்டவரின் நாள் வரும்போது அவரை எதிர்கொள்ள, நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ள 
 இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...