புதன், 2 நவம்பர், 2022

யாருக்கு முதலிடம்? (29-10-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது, நாம் முதன்மைப்படுத்த வேண்டியது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை என்ற ஆழமான சிந்தனையினை நமக்கு தருகிறது. திருத்தூதர் பவுல்  தனது வாழ்வில் அனைத்தையுமே இயேசுவுக்காக செய்கின்ற ஒரு மனிதராக இருந்தார். நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காக. நான் இறந்தாலும் அது கிறிஸ்துவுக்காக. அதுவே தன் வாழ்வின் ஆதாயம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதராக இயேசுவை முதன்மை படுத்தக்கூடிய ஒரு மனிதராக பவுல் இருந்தார் என்பதை பவுலின் வாழ்வில் இருந்து அறிந்து கொள்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட நாம் அழைக்கப்படுகின்ற போது, முதன்மையான இடத்தை நாடுவதை விட, கடைசியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போது முதன்மையான இடமானது நமக்கு வழங்கப்படும் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். 

               நமது வாழ்வில் நம்மை முன்னிறுத்தி பயணிப்பதை விட, ஆண்டவர் இயேசுவை முன்னிறுத்தி நமது செயல்களை அனுதினமும் அமைத்துக் கொள்ளுகிற போது, கடவுளின் பார்வையில் முதன்மையான இடத்தை பெறக்கூடிய நபர்களாக நாம் மாற முடியும் என்ற வாழ்வுக்கான சிந்தனையினை, இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார். 

    இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கான
ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...