வியாழன், 3 நவம்பர், 2022

நமது மன மாற்றம் பல மனங்களை மாற்றும்! (3-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தையானது மன மாற்றம் அடைவதற்கான அழைப்பினை நமக்கு தருகிறது. மனம் மாறிய ஒரு நபரை குறித்து  கடவுள் மகிழ்கிறார் என்ற செய்தியானது, இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நமக்கு தரப்படுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்வதற்காக அனைத்தையும் குப்பை என கருதுகிறேன் என்ற பவுலடியார், தன் வாழ்வில் இந்த இயேசுவின் வார்த்தையை வாழ்வாக மாற்றிக் கொள்வதற்காக தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் இழக்கத் துணிந்த ஒரு மனிதனாக இருந்தார் என்பதை நாம் முதல் வாசகத்தின் வாயிலாக அறிந்து கொள்கிறோம். 

இந்த பவுல் அடியாரை போல நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவின்  வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு இந்த ஆண்டவரை மட்டுமே நாடிச் செல்லக்கூடிய மனிதர்களாக மாற வேண்டும் என்ற அழைப்பானது, இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது.

           இந்த இயேசுவுக்கு உகந்த ஒரு வாழ்வை நாம் வாழ வேண்டுமாயின், நல்லதொரு மனமாற்றம் அடைந்த மனிதர்களாக நாம் மாற வேண்டும். நமது மன மாற்றம் பல மனங்களை மாற்றும் என்பதை உணர்ந்து கொண்ட மனிதர்களாக, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், நல்லதொரு மாற்றம் பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கக் கூடிய மனிதர்களாகிட இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம்.  இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...