வியாழன், 10 நவம்பர், 2022

இறையாட்சி உங்கள் நடுவே செயல்படுகிறது! (10-11-22)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

              இன்றைய முதல் வாசகமானது, திருத்தூதர் பவுல் சிறையில் இருந்த வண்ணமாக, பிலமோனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து நாம் வாசிக்கின்றோம். நீ கடிதத்தில் அவர் ஒனேசிமை பற்றி குறிப்பிடுகின்றார். ஒனேசிம் என்ற மனிதன் பிலமோனிடத்தில் அடிமையாக இருந்த மனிதன். பவுல் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு அந்த வார்த்தையின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, பவுலை பின் தொடரக்கூடிய ஒரு மனிதனாக இந்த ஒனேசிம் மாறிப் போகின்றார். 

         நாளடைவில் இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவித்த காரணத்தினால், இந்த பவுல் சிறைக்குச் செல்கின்றார். தான் சிறையில் இருக்கின்ற பொழுது, தன்னிடம் இருக்கின்ற இந்த ஒனேசிமை மீண்டுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனை அடிமையாக நடத்தக் கூடாது. உன் சகோதரனாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, பிலமோனுக்கு அவர் எழுதிய கடிதத்தைத் தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

         இந்த வாசகத்தின் பின்னணியோடு இன்றைய நற்செய்தி வாசகத்தை அணுகுகின்ற போது, இறையாட்சி பற்றி பலரும் பல விதமான தவறுதலான கருத்துக்களை கூறி, நம்மிடையே பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்துகிற போது, நாம் நமது வாழ்வில் நெறி தவறி விடாமல், ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக, நமது வாழ்வை இயேசு காட்டிய நற்செய்தியின் விழுமியங்களின் அடிப்படையில் அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் அன்போடும் சகோதரத்துவத்தோடும், ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ வேண்டும். அத்தகைய ஒரு வாழ்வு தான் இறையாட்சிக்கான  அடித்தளம் என்பதை இயேசு சுட்டிக் காட்டுவதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம். 

         இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில், ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...