என் தாயும் சகோதரர்களும் ஆவார் என்று கூறினார் .
புதன், 30 டிசம்பர், 2020
போராட்டத்தில் பூத்த புத்தாண்டு! (01.01.2021)
என் தாயும் சகோதரர்களும் ஆவார் என்று கூறினார் .
மீட்புத்திட்டத்தில் இறைவனின் தாய் அன்னை மரியா! (01.01.2021)
ADORATION SERVICE ( 31st December 2020 )
ADORATION
SERVICE
31st December 2020
Bhajan
C. Bless and praise every
moment...
Glory be...
(Background music / all seated)
The sequence of events and the passing of days
mark the growth of our existence.
Liturgy is the consecration of time in an era of salvation. At the end of every year, we are exhorted to
take stock of ourselves. For us,
individuals and communities, this demands an examination of conscience and a
revision of life. It is a partial
assessment which puts individuals and communities face to face with the
salvific plan of God. On the one hand,
there is the awareness of one's own inadequacies, of the lack of response to
community needs, and of one's personal sins; on the other, there are the
manifold graces bestowed by the Lord during the year of grace which is now
drawing to a close. Let us with sentiments of sorrow, but above all of praise
and thanksgiving entrust everything to the Lord in a spirit of humility and
gratitude.
Gathered together before the Lord on this last
day of the year, let us, as individuals and as a community, ask pardon for the
time spent in a manner not befitting a Christian and a Salesian.
C. O benevolent and merciful God, help us to
acknowledge our sinfulness, and to discern in the circumstances of our daily
life, the project of liberation you have traced out for each one of us. Foster our desire for conversion, so that we
may ask you, the author of life, pardon for all that has been an obstacle to
our journey towards the fullness of our being.
We make this prayer through Jesus Christ our Lord. Amen.
Let us praise and thank the Lord for the gifts he has bestowed on us during this year 2019. Let us thank him for coming into our midst, for the gift of the Christian and Salesian vocation and for calling us to follow him in humility of spirit, purity of heart and poverty of life.
Individuals are welcome to express their sentiments of praise and thanksgiving
Let us sum up all our feelings of thanksgiving for all that the good Lord has done for us during the past years, through the song played on the tape.
(Words of the song is displayed
on the wall through overhead projector)
As we are on the eve of the solemnity of Mary the
Mother of God and the New Year let us entrust the New Year to the protection of
Mary Most Holy and ask the Lord through the intercession of Mary to bless us
with all the graces we will be in need of in the coming year 2020.
New Year reminds us of fresh beginnings and the
desires to start anew whatever task we are going to undertake. Let whatever we undertake begin from God and
be geared towards His greater glory. Let's express this desire through the song
"Let me start again".
Bhajan (Adoration hymn)
Blessing
Final Hymn
செவ்வாய், 29 டிசம்பர், 2020
சான்று பகர்வோம்....(31. 12.2020)
இருளை சபிப்பதை விட ஒளி ஏற்றுவோம்! (30.12.2020)
நன்றி வழிபாடு! (31.12.2020)
புத்தாண்டு திருவிழிப்புத் திருப்பலி - 1 (1.1.2021)
புத்தாண்டு திருவிழிப்புத் திருப்பலி
திருப்பலி முன்னரை:
அன்புக் குழந்தை இயேசு பாலனின் அருள் நாடி, உறக்கம் களைந்து ஓடிவந்து ஒன்றாய் கூடியிருக்கும் பாசமிகு சகோதர சகோதரிகளே! மாற்றம் ஒன்றே மாறாத இந்த உலகில் எப்போதுமே பழையன கழிதலும் புதியன புகுவதுமாய் உள்ளது. புதுமையை நாடி எந்நாளும் ஓடிக்கொண்டிருக்கும் மாறாத இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் மாற்றங்களைத் தேடி விடாபிடியாய் ஓடிக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய மாற்றம் நிறைந்த இவ்வுலகில் கடந்து போகும் ஒவ்வொரு கனமும் மாற்றம் காணும் சூழலில், இன்னும் ஒருசில மணித்துளிகளில் நாம் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கின்றோம். “எதுவும் மறந்து போகும் எல்லம் கடந்து போகும்”என்ற எண்ணத்தில் வருகின்ற இந்தப் புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோமா? அல்லது வழக்கமாக இல்லாமல், நமது வாழ்வில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் முன்னேற்றத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும் தகுந்த தயாரிப்புடனும் நாம் இந்த புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோமா? 1சாமூவவேல் 16:7ஆம் வசனத்தில் கொடுக்கப்டட்டுள்ள,“ஆண்டவர் முகத்தை அல்ல, அகத்தை பார்க்கிறார்” என்ற இந்த வசனம்,“ஆண்டவர் நம் முக மாற்றத்தை அல்ல, அக மாற்றத்தையே எதிர்பார்க்கிறார்” எனற கருத்தை நமக்கு உணர்த்துகிறது. முனதளவில் மாற்றம் கண்டு மகிழ்ச்சி நிறை புது வாழ்வை படைத்ததிட இன்றைய வாசகங்களும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. புலரப்போகும் புதிய ஆண்டில், இப்புவியில் புதிய மனிதராய் வாழவும், புது உலகம் படைத்திடவும், புத்துணர்வோடு, புதிதாய் பிறந்திருக்கும் இயேசு பாலனிடம் மன்றாடுவோம். இறைவனின் அன்பையும், அருளையும், இறக்கத்தையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டு ஒரு குடும்பமாய் உலகை மாற்ற புறப்படுவோம் இப்புதிய ஆண்டில்.
முதல் வாசக முன்னரை: (எண் 6: 22-27)
அன்பு இறைக்குலமே! இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக இவ்வாறு சொல்கிறார். “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! அவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!”எனவே, அதே ஆசீரை பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் கடவுள் நமக்கு அளித்திட, அவ்வருளை நாம் பெற்றிட நமக்கு அழைப்பு விடுக்கும் இம் முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: (கலாத்தியர் 4: 4-7)
தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலின் வழியாக வெற்றுச் சட்டத்திற்கு அடிமைகளாய் இருந்த நம்மை மீட்டு தம்முடைய பிள்ளைகளாக்குமாறு தம் ஒரே மகனை பெண்ணிடம் பிறந்தவராக இவ்வுலகிற்கு அனுப்பினார். அது மட்டுமல்லாமல், நாம் கடவுளை அப்பா, தந்தை என்று அழைக்கும் உரிமையையும் அவர் மூலம் நமக்குத் தந்தருளினார் என்ற சிந்தனையோடு செவிமெடுப்போம், இரண்டாம் வாசகத்திற்கு.
மன்றாட்டுகள்:
1. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! புpறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக உம்மிடம் மன்றாடுகின்றோம். நீரே அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, தேர்வை நல்ல முறையில் எழுதவும், நல்ல மதிப்பெண் பெறவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. தலைவர்களுக்கெல்லாம் தலைவரே எம் இறைவா! ஏம் திருச்சபையை வழிநடத்தும் தலைவர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்;, துறவியர் கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் ஆசீர்வதியும். நீரே அவர்களுக்கு உமது ஆசியைப் பொழந்து, அவர்களோடு இருந்து, எங்களை வழிநடத்த வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஆறுதலின் பிறப்பிடமே எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எல்லாவற்றிலும் எங்களை வழிநடத்தியதற்கு நன்றியாகவும், வரக்கூடிய புதிய ஆண்டில் எங்கள் சொல், செயல்,சிந்தனை அனைத்திலும் ஆறுதலாய் எங்களுடன் இருந்து எங்களை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பு ஆண்டவரே! ஏம் பங்கு மக்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இப்புதிய ஆண்டில் அனைவருக்கும் உடல், உள்ள ஆன்ம சுகம் தந்து, அவர்கள் செய்யும் தொழில் சிறக்கவும் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையவும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. மருத்துவருக்கெல்லாம் மருத்துவரே எம் இறைவா! பரவிவரும் பல்வேறு நோய்களிலிருந்தும், இயற்கைப் பேரிடர்களிடமிருந்தும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் அனைத்து மக்களையும் காக்கவும், நீரே அவர்களுக்கு உற்ற துணையாய் இருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கன்னி மரியாள் இறைவனின் தாய் (புத்தாண்டு திருப்பலி) - 3 (01. 01.2021)
கன்னி மரியாள் இறைவனின் தாய் முன்னுரை
வரங்களையும் வளங்களையும் நமக் கீந்து
முதிர்மனங் கொண்ட முன்மாதிரி மனிதராய் - நமைமாற்ற
அனுபவங்கள் பல நிறைவாய் தந்துவிட்டு
சென்றிருக்கிறது 2020 ஆம் ஆண்டு
புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு
இறைவன் நமக்களித்த இனிய வாழ்த்து
அவர் உலகினோர்க்கு வழங்கிய அன்பு பரிசு
இந்த புதிய ஆண்டிலே இறைவனது இரக்கமிகு அருட்கொடையிலும், நிலைசாயா நம்பிக்கையிலும் அசைக்க முடியா விசுவாத்திலும் ஒன்றித்து வாழ அழைக்கப்படுகிறோம்.
புத்தாண்டையே பரிசாக கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார் இதை உணர்ந்து கொள்வோம். புரிந்து கொள்வோம்.
பழையன கழிவோம் - தீமைகளை மட்டும்
புதியன புகுவோம் - நன்மைகளால் நிறைவோம்.
மேலும் இன்று நாம் அன்னை மரியால் இறைவனுடைய தாய் என்று திருஅவையால் அறிவிக்கப்பட்ட விழாவை கொண்டாடுகிறோம். கிறிஸ்து பிறப்பு நமக்குள் ஒளியை ஏற்றுகிறது. இந்த ஒளி இந்த புதிய ஆண்டு முழுவதுமாக நம்மில் ஒளிர, ‘நம்பிக்கை’ என்னும் எண்ணெயை நம் மனதில் விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நம்பிக்கை என்னும் வேர் காய்ந்து போனால், வாழ்க்கை என்கிற மரம், பட்டுப்போகும். அன்னை மரியாள் இயேசுவின் வாழ்வுக்கு வேராக இருந்தவள். அவளின் தாழ்ச்சி, எளிமை, தூய்மை, பக்தி யாவுமே தாய்மைக்கு மணிமகுடம். மரியாள், இயேசு என்னும் சிற்பத்தை பக்குவமாய் செதுக்கிய சிற்பி. காணாமல் போன போதும், கல்வாரி மலையிலும் தன் மகனுக்காய் பதறிய இதயம். தன் வாழ்வு முழுவதும் இறைவனுக்கும், அவர் சித்தத்திற்கும் அர்பணித்த தியாகச் செம்மல். துன்பமும் துயரமும் வாட்டும்போது, இவ்வுலகிற்கு அமைதி செய்திச் சொன்ன சமாதானப்புறா. இதனால்தான் இன்று ‘மரியாள் இறைவனின் தாயானால்’. ‘இதோ உன் தாய்’ என்று, இயேசுவும் தாய்மைக்கு மணிமுடி சூட்டுகிறார். தவறுகளையேல்லாம் மன்னிக்கும் இதயம் தாயின் இதயம் ஒன்றே. எனவே, இப்புத்தாண்டு தினத்தில் இத்தாயின் வழி செல்வோம், இறையருளைப் பெற்று, இந்நம்பிக்கை ஆண்டை வெற்றியுடன் துவங்குவோம். அதற்கான வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்!
புத்தாண்டு திருப்பலி - 2 (1.1.2021)
புத்தாண்டு திருப்பலி
முன்னுரை
குழந்தை இயேசுவின் அன்பில் இறை சமூகமாய் ஒன்று கூடியிருக்கும் சகோதர, சகோதரிகளே!
பழையன கழிதலும், புதியன புகுதலும் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத எதார்த்தமாகி விட்டன. எதை எடுத்துக் கொண்டாலும் புதுமையை நாடி ஓடிக்கொண்டிருக்கின்றது இந்த உலகம். மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகில் நாமும் மாறிக்கொண்டு தான் இருக்கிறோம். மனித உறவுகளையும் மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றோம். இத்தகைய சூழலில் இன்னும் சில மணித்துளிகளில் நாம் 2021 என்னும் புதிய வருடத்தில் காலடி வைக்க போகின்றோம். பத்தோடு ஒன்று பதினொன்றாய் இந்த வருடத்தையும் நாம் எதிர்நோக்குகின்றோமா? அல்லது நமது வாழ்வில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் நம்மை முன்னேற்;றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் எதிர்நோக்கி இங்கே வந்திருகின்றோமா? சிந்தித்துப் பார்க்க அழைக்கின்றது இப்பெருவிழாத் திருப்பலி…
வண்ண ஆடை, அணிகலன்களை மட்டும் புதிதாக மாற்றிக் கொண்ட நாம், நமது உள்ளத்தையும் புதிதாக மாற்றி அமைத்து, தந்தையாம் இறைவனுக்கு நன்றிச் செலுத்திடவும், இறைவனின் தாயான கன்னி மரியாளின் பரிந்துரைச் செபத்தைக் கேட்டிட, இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. வெளி ஆடம்பரங்களை மட்டும் விரும்பும் நமக்கு “ஆண்டவர் முகத்தை அல்ல, அகத்தைப் பார்க்கிறார்” (1சாமு 16:7) என்கிற இறைவார்த்தை நம்மை புதிய மனிதர்களாய் வாழவும் நமது பழைய பாவநிலையை அகற்றி, இறைவன் தங்கும் ஆலயமாக வாழவும் பணிக்கிறது.
புலரவிருக்கிற இந்த புதிய ஆண்டிலே நாமும் நம்முடைய பழைய வாழ்க்கையின் குறைகளை அகற்றுவோம். நமது உறவுகளிலே புரிதலும், உண்மையும் கொண்டு புது உலகம் படைத்திட விழைவோம். நமது செயல்பாடுகள் பிறருக்கு ஊக்கம் தருகிற உரமாக அமைய முற்படுவோம். புனித பவுலடியார் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்வது போல நம்மிடையே எந்த வேறுபாடும், பாகுபாடும் இல்லாமல் இறைவனின் அன்பைச் சுவைக்கும் மக்களாய் வாழ முயலுவோம். புது மனிதர்களாய் புது பிறப்படைந்த கிறிஸ்தவர்களாய் வாழ இறைவனின் அருளை இத் திருப்பலியில் மன்றாடுவோம்.
ஒருவர் மற்றவருக்காய் செபிப்போம்!
முதல் வாசக முன்னுரை
எண் 6:22-27
கடவுளின் சேவர்கள் மக்களுக்கு எவ்வாறு ஆசி வழங்க வேண்டும் என்று முதல் வாசகம் நமக்கு கூறுகிறது. அவர்கள் ஆசி வழங்கும் போது ஆண்டவர் மக்களை காக்கின்றார் என்றும், ஆண்டவருடைய திருமுகம் என்றென்றைக்கும் மக்கள் மேல் ஒளிர்கிறது என்று கூற வேண்டும் என கூறும் இவ்வாசகத்திற்கு செவி மடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கலா 4:4-7
உலக மீட்பர் இயேசு கிறிஸ்து வழியாக ஆண்டவருடைய ஆவி நம்மில் குடிகொண்டிருக்கிறது. அந்த ஆவி கடவுளை அப்பா தந்தையே என அழைக்கும் உரிமையை கொடுத்துள்ளது. ஆக இனி நாம் அனைவரும் அடிமைகளல்ல. மாறாக இறைவனின் பிள்ளைகள் என கூறும் பவுல் அடிகளாரின் மடலுக்கு செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்:
1. அன்பே உருவான இறைவா! திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரையும் இப்புதிய ஆண்டில் ஆசீர்வதித்து, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நீர் உம்முடைய உடனிருப்பைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பால் ஆளுகை செய்யும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள், அரசு பணியாளர்கள், அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து ஊழல், லஞ்சம் தவிர்த்து உண்மையான பிறநல எண்ணத்தோடு பணியாற்றிடவும், மக்களின் நலனில் அக்கறைக் கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. வளங்களின் நாயகனே எம் இறைவா! எம் பங்குத் தந்தையையும், பங்கு மக்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து இப்புதிய ஆண்டில் நாங்கள் அனைவரும் அன்பின் சமூகமாக வாழவும், நற்செய்தியின் விழுமியங்களை எங்கள் வாழ்வின்மைக்காகவும் கொண்டு புது சமூகத்தை உருவாக்க எங்கள் அனைவருக்கும் நல் மனதினை தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நிறைவாழ்வு வழங்கும் இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல ஞானத்தையும், இளையோருக்கு வேலை வாய்ப்பையும், உடல் நலமற்றோருக்கு நல்ல உடல் சுகத்தையும், மேலும் பல்வேறு கனவுகளை இதயத்தில் சுமந்து நிற்கும் உம் பிள்ளைகளாகிய எங்களின் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
புத்தாண்டு காலைத் திருப்பலி - 4 (1.1.2021)
புத்தாண்டு காலைத் திருப்பலி
திருப்பலி முன்னுரை:
“தூய கன்னி மரியா இறைவனின் தாய்”
“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசெபத் பணிந்ததும், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றவரே” (லூக் 1: 42) என்று கூறப்பட்டதை, இன்று நாம் விழா எடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் இறைவனின் தாய் என்று அழைக்கப்படும் அன்னை மரியாவைப் பற்றியே. இயேசுவின் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே. இன்று புத்தாண்டின் முதல் நாளாகவும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் 8ஆம் நாளாகவும், அகில உலக அமைதியின் நாளாகவும் மற்றும் இவற்றின்
நடுவே நம் தாயாம் திருச்சபையானது தூய கன்னிமரி இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி 5ஆம் நூற்றாண்டில் மரியா இயேசுவின் தாய் தான் இறைவனின் தாய் அல்ல என்ற நெஸ்டோரியஸின் தவறான கருத்தை மக்கள் பின்பற்றினார்கள். ஆனால் இந்த தவறானக் கருத்தை உடைத்தெரிவதற்காக கி.பி 431இல் கூட்டப்பட்ட எபேசு நகர்ப் பொதுச்சங்கத்தில் மரியா இறைவனின் தாய் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுத்துக் கூறியது. எப்படி அன்னை மரியாள் இறைவனின் தாய் என்றால், திருவிவிலியத்ததின் அடிப்படையில் அன்னை மரியாள் கிறிஸ்துவின் தாய் என்று நாம் சிறு குழந்தையிலிருந்தே கேட்டிருப்போம் ஆனால் இறைவனின் தாய் என்றால் நம் அனைவருக்கும் புரியாத ஒரு கருத்தாக உள்ளது. நம் திருச்சபையானது இயேசு கிறிஸ்துவை இரண்டு தன்மைகள் வாயிலாக கூறப்படுகிறது. ஓன்று மனிதத்தன்மை மற்றொன்று இறைத்தன்மை. எனவே,அன்னை மரியாளை கிறிஸ்துவின் தாயாகவும் இறைவனின் தாயாகவும் கூறப்படுகிறது. எனவே,ஆண்டவரின் நாள் மகிழ்சியுடன் வருமளவும் பயணமாகும். இத்திருச்சபையை தாய் அன்போடு பேணி தாயகம் செல்லும் வழியில் அதனை கனிவோடு காத்து வருகிறார் என்பது நமக்கு ஆறுதல் தரவேண்டும். இத் திருநாளின் வழியாகத் திருச்சபை நம் ஒவ்வொருவரையும் விண்ணகத் தாயின் பாதுகாப்பு என்னும் போர்வையில் வைத்து காக்கிறது. எனவே இந்த புதிய நாளிலிருந்து நாம் புதிய மனிதர்களாய் மாறவும், வாழவும் நமது பழைய பாவநிலையை அகற்றி இறைவன் தங்குமிடம் ஆலயமாக வாழவும் இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை: (எண் 6: 22-27)
இறை இயேசுவில் அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே இன்றைய முதல் வாசகத்தின் மைக்கருத்து,“ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!”இவ்வாறு அவர் கூறியதோடு, தமக்கு நிறைவான ஆசீரை பொழிகிறார் என்று கூறும் முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: (கலாத்தியர் 4: 4-7)
குழந்தை இயேசுவில் அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே இன்றைய இரண்டாம் வாசகத்தில் மைக்கருத்தாக விளங்குவது,“அவர் நம் அப்பா, நம் தந்தை”. கடவுள் நமக்கு அவரை அப்பா என்று கூறும் உரிமையைக் கொடுத்துள்ளார். அன்று நாம் பெற்ற திருமுழுக்கின் போது இதை கூறிய இறைவன் இன்று அதையே கூறுகிறார். எனவே, இனிமேல் நாம் அடிமைகள்; அல்ல கடவுளின் பிள்ளைகள் எனவும், அப்பா என்று கூறுவது. நம் உரிமைய எனவும் கூறும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
திங்கள், 28 டிசம்பர், 2020
நமது வாழ்வை இறை வார்த்தைகளின்படி அமைத்துக் கொள்வோம். (29.12.2020)
ஞாயிறு, 27 டிசம்பர், 2020
ஒளியை சார்ந்தவர்களாக இருப்போம்! (28.12.2020)
சனி, 26 டிசம்பர், 2020
மாசில்லா குழந்தை தினம் (28.12.2020)
மாசில்லா குழந்தை தினம்
முன்னுரை
இறையேசுவில் அன்புகொண்டு அவரின் பிள்ளைகளாய் வந்திருக்கும் இறைமக்கள் (அ) சகோதர சகோதரிளே உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்னையாம் திருச்சபை இன்றைய நாளில் மாசில்லா குழந்தைகள் தினத்தை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஏன்? என்று பார்க்கும்போது, இயேசு பிறந்தபோது இயேசு பாலனைக் கண்ட மூன்று ஞானிகள் தம்மிடம் திரும்பி வரவில்லை என்ற கோபத்தினால் பெத்லகேமிலும், அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள 2 வயதிற்குற்பட்ட ஆண்களை கொல்ல ஆணையிட்டான். அவ்வாறு இறந்த குழந்தைகளின் நினைவாகத் திருச்சபை அவர்களையும் மறைசாட்சிகளாகவும், முதல் மறைசாட்சிகளாகவும் மதித்து விழா எடுத்து சிறப்பிக்கின்றது.
இத்தகைய சிறப்புமிக்க இந்த குழந்தைகளின் விழாநாளில் இன்றை இறைவார்த்தைகளின் வழியாக இறைவன,; ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை என்றும், என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன் என்று புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வழியாகவும், வானதூதர் யோசேப்புக்கு கனவின் மூலம் எச்சரித்து அவர் குடும்பத்துடன் எகிப்துக்கு தப்பி ஓடியதும், ஏரோது மன்னன் பெத்லகேமில் உள்ள இரண்டு வயதிற்குற்பட்ட குழந்தைகளை கொலை செய்யும்படியும் நிகழ்வுகளை கொண்ட புனித மத்தேயு நற்செய்தி வழியாகவும் இறைவன் நம்மிடம் பேசுகிறார். எனவே நாமு; அத்தகைய ஒளியால் இறைவன், தெய்வபாலனாக நம் மனதிலும் பிறந்திருக்கிறார் என்ற எண்ணங்களோடும் அந்த குழந்தை யேசுவுக்காக மரித்த குழந்தைகளுக்காகவும் மற்றும் நமது பங்குகளில் மரித்த அனைத்து மாசில்லா குழந்தைகளுக்காகவும் ஜெபிப்போம். மேலும் என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என்று இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்ற புனித யோவானின் விருப்பப்படி வாழவும் நீங்கள் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசுக்;கு நுழைய முடியாது என்ற இயேசுவிடம் நாமும் குழந்தைகள் போல் மாசில்லா வாழ்வு வாழ வரம் கேட்டு இத்திருப்பலியில் தொடர்ந்து பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை: (1யோவா 1:5-2:2)
ஒளியின் மக்கள் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெறிவிக்கிறேன். இறைமகன் இயேசு கிறிஸ்து “நானே உலகின் ஒளி என்னை பின் செல்பவர் இருளில் நடவார்” என்று பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் அதற்கு சான்றாக புனித யோவனும் தனது முதல் திருமுகம் வாயிலாக கடவுள் ஒளியாய் இருக்கிறார் என்றும் அந்த ஒளியில் நடந்தால் வாழ்வு, மன்னிப்பு தாழ்ச்சி ஆகிய ஆசீர்களை பெறமுடியம் என்பதை உணரவும், இயேசுவே நம் பாவங்களுக்குக் கழுவாய் என்பதை உணர்ந்தும் இந்த முதல் வாசகத்திற்கு நம் முழு மனதுடன் செவிமெடுப்போம்.
மன்றாட்டுகள்:
1. நானே உலகின் ஒளி என்றுகூறிய எம் இறைவா! உலகின் ஒளியான நீர் பிறந்தவுடன் உமக்காக மரித்த மாசில்லா குழந்தைகள் அனைவருக்காகவும், எம் பங்கில் மரித்த அனைத்து மாசில்லா குழந்தைகளுக்காகவும் ஜெபிக்கின்றோம். நீர் தாமே அவர்களை உமது வான்வீட்டில் சேர்த்து கொள்ளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறன்றோம்.
2. சிறு பிள்ளைகளைப்போல் மாறாவிட்டால் விணணகத்திற்குள் நுழைய முடியாது என்று உரைத்த எம் இறைவா, பாவிகளாக வாழ்ந்து வரும் எங்கள் ஒவ்வொருவரையும் உம் கருணைக் கண் பாரும்.நாங்கள் ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகள் போல் தூய்மையாக மாறுவதற்கு தேவையான அருளும் ஆசிரும் தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள் என்று கட்டளையிட்ட எம் ஆயனே! எமது பங்கில் குழந்தை வரம் இல்லாமல் தவிக்;கும் ஒவ்வொருவருக்கும் குழந்தை பாக்கியத்தை அருளி அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று எல்லாம் வலல இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இச்சிறியவர்களுக்குச் செய்ததை எல்லாம் எமக்கே செய்தீர்கள் என்று கூறிய எங்கள் தேவனே, இன்றைய உலகில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன் கொடுமைகளுக்காகவும், குழந்தை தொழிலாளர்கள் ஒடுக்குமுறைக்காக மன்றாடுகிறன்றோம். தேவனே அத்தகைய உம் பிள்ளைகளுக்கு எதிராக உள்ள அனைத்துக் கொடுமைகளை அகற்றி நல்வாழ்வு தந்திட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...