செவ்வாய், 29 டிசம்பர், 2020

புத்தாண்டு காலைத் திருப்பலி - 4 (1.1.2021)

 புத்தாண்டு காலைத் திருப்பலி 


திருப்பலி முன்னுரை: 

“தூய கன்னி மரியா இறைவனின் தாய்”

“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிசெபத் பணிந்ததும், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றவரே” (லூக் 1: 42) என்று கூறப்பட்டதை, இன்று நாம் விழா எடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் இறைவனின் தாய் என்று அழைக்கப்படும் அன்னை மரியாவைப் பற்றியே. இயேசுவின் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே. இன்று புத்தாண்டின் முதல் நாளாகவும், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் 8ஆம் நாளாகவும், அகில உலக அமைதியின் நாளாகவும் மற்றும் இவற்றின் 

நடுவே நம் தாயாம் திருச்சபையானது தூய கன்னிமரி இறைவனின் தாய் என்ற பெருவிழாவைக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி 5ஆம் நூற்றாண்டில் மரியா இயேசுவின் தாய் தான் இறைவனின் தாய் அல்ல என்ற நெஸ்டோரியஸின் தவறான கருத்தை மக்கள் பின்பற்றினார்கள். ஆனால் இந்த தவறானக் கருத்தை உடைத்தெரிவதற்காக கி.பி 431இல் கூட்டப்பட்ட எபேசு நகர்ப் பொதுச்சங்கத்தில் மரியா இறைவனின் தாய் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுத்துக் கூறியது. எப்படி அன்னை மரியாள் இறைவனின் தாய் என்றால், திருவிவிலியத்ததின் அடிப்படையில் அன்னை மரியாள் கிறிஸ்துவின் தாய் என்று நாம் சிறு குழந்தையிலிருந்தே கேட்டிருப்போம் ஆனால் இறைவனின் தாய் என்றால் நம் அனைவருக்கும் புரியாத ஒரு கருத்தாக உள்ளது. நம் திருச்சபையானது இயேசு கிறிஸ்துவை இரண்டு தன்மைகள் வாயிலாக கூறப்படுகிறது. ஓன்று மனிதத்தன்மை மற்றொன்று இறைத்தன்மை. எனவே,அன்னை மரியாளை கிறிஸ்துவின் தாயாகவும் இறைவனின் தாயாகவும் கூறப்படுகிறது. எனவே,ஆண்டவரின் நாள் மகிழ்சியுடன் வருமளவும் பயணமாகும். இத்திருச்சபையை தாய் அன்போடு பேணி தாயகம் செல்லும் வழியில் அதனை கனிவோடு காத்து வருகிறார் என்பது நமக்கு ஆறுதல் தரவேண்டும். இத் திருநாளின் வழியாகத் திருச்சபை நம் ஒவ்வொருவரையும் விண்ணகத் தாயின் பாதுகாப்பு என்னும் போர்வையில் வைத்து காக்கிறது. எனவே இந்த புதிய நாளிலிருந்து நாம் புதிய மனிதர்களாய் மாறவும், வாழவும் நமது பழைய பாவநிலையை அகற்றி இறைவன் தங்குமிடம் ஆலயமாக வாழவும் இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம். 

முதல் வாசக முன்னுரை: (எண் 6: 22-27)

இறை இயேசுவில் அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே இன்றைய முதல் வாசகத்தின் மைக்கருத்து,“ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன் மீது அருள் பொழிவாராக!”இவ்வாறு அவர் கூறியதோடு, தமக்கு நிறைவான ஆசீரை பொழிகிறார் என்று கூறும் முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம். 

இரண்டாம் வாசக முன்னுரை: (கலாத்தியர் 4: 4-7)

குழந்தை இயேசுவில் அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே இன்றைய இரண்டாம் வாசகத்தில் மைக்கருத்தாக விளங்குவது,“அவர் நம் அப்பா, நம் தந்தை”. கடவுள் நமக்கு அவரை அப்பா என்று கூறும் உரிமையைக் கொடுத்துள்ளார். அன்று நாம் பெற்ற திருமுழுக்கின் போது இதை கூறிய இறைவன் இன்று அதையே கூறுகிறார். எனவே, இனிமேல் நாம் அடிமைகள்; அல்ல கடவுளின் பிள்ளைகள் எனவும், அப்பா என்று கூறுவது. நம் உரிமைய எனவும் கூறும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம். 


மன்றாட்டுக்கள் :

1. மாடடைக்குடிலில் மரியின் மடியில் தவழ்ந்த இயேசுவே! நிலை வாழ்வுத் தரும் விண்ணக அரசை நோக்கி எங்களை வழி நடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவியர் உம் பிறப்பின் மகிழ்வால் உந்தப்பட்டு உம் மக்களுக்கு ஒளியாக வழியாக சாரமூட்டும் உப்பாக இருந்து எம்மை எம் மீட்புப் பாதையில் வழிநடத்தி செல்ல வேண்டிய வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அவனிக்கு அமைதியை கொண்டுவந்த இயேசுவே உம் பிறப்பால் சாமக்காவல் காத்திருந்த இடையர்கள் மகிழ்ந்தனர். வானாக தூதர்அணி வாழ்த்திப் பாடியது. அன்று உம் பிறப்பால் எருசலேம் முழுவரும் ஆனந்தம் பொங்கியது போல் இன்றும் எங்கள் மத்தியில் உம்முடைய மகிழ்ச்சி, அன்பு, அமைதி நிலவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பாரினை பரமன் பாதையில் நடத்திட பிறந்த பாலனே, எம் பங்கு என்னும் திருச்சபையை வழிநடத்தும் எம் பங்குத் தந்தை, அன்பிய பிரதிநிதிகள் அனைவரையும் உம் ஒளியால் நிரப்பி இவர்கள் தங்களை முழுமையாக மக்கள் பணியில் ஈடுபடுத்தி மக்களை உம் மதிப்பீடுகளுக்கு ஏற்றார் போல் கட்டியெழுப்ப வேண்டிய வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. மனித குலம் மீட்படைய மனுவுறுவான இயேசுவே, கீழ்த்திசை மன்னர்கள் மூவர் பொன், வெள்ளி, தூபம் அளித்து மகிழ்ந்தது போல் உம் அருள் வேண்டி ஆலவோடு உம் திருமுன் குழமியிருக்கும் எங்களையும் நிறைவாய் உந்தன் பிஞ்சுக்கரம் தொட்டு ஆசீர்வதித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மண்ணுலகில் விண்ணுலகை படைத்திட ஆவல் கொண்ட பாலனே. இன்று எம் தாய்த் திருநாடு மதவாதிகளின் பிடியில் சிக்குண்டு மக்கள் படும் வேதனையை நீ அறிவீர். பாலனே இன்று உம் பிறப்பு மதங்கள் மீது மதம் பிடித்து அலையும் எம் நாட்டுத் தலைவர்களுக்கு வேள்வியாய் அமைந்து மதசார்பற்ற மக்களாட்சி மீண்டும் தழைத்திட வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

6. அவனியை ஆண்டிட மனுவுறுவெடுத்த ஆதவனே. எங்கள் நாட்டு இளைஞர்களுக்காகவும், இளம்பெண்களுக்காகவும் மன்றாடுகிறோம். பேரிருளில் இருந்த மக்கள் ஒளியைக் கண்டதுபோல் வேலையின்றி இரவும், பகலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் அதன் வறண்டாக்களையும் உறைவிடமாக்கிக் கொண்ட இவர்களுக்கு ஒரு நல்ல பாதையைக்காட்டி இவர்கள் வாழ்விலும் ஒளியேற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...