சான்று பகர்வோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உ
ங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் அனைவரும் தூய ஆவியாரால் அருள்பொழிவு பெற்றவர்கள் என யோவான் குறிப்பிடுகிறார். இந்த தூய ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டு திருமுழுக்கு தர இருக்கக்கூடிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நபராக திருமுழுக்கு யோவான் இருப்பதை, இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நாம் அறிகிறோம்.
தொடக்கத்திலிருந்தே ஆண்டவரிடம் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வார்த்தையான இறைவன் வார்த்தை வழிகளில் பலவிதமான அற்புதங்களை இம்மண்ணில் நிகழ்த்தினார். இந்த வார்த்தையான இறைவனை முன்னறிவிக்கக்கூடிய சுட்டிக் காட்டக்கூடிய நபராக திருமுழுக்கு யோவான் இன்று நம்மிடையே செயலாற்றுகிறார். திருமுழுக்கு யோவான் இந்த வார்த்தையான இறைவனை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். இந்த வார்த்தையான இறைவனாகிய இயேசு கிறிஸ்து ஒளியானவர். இவர்தான் உலகிற்கு ஒளி கொண்டு வந்தவர். இவர்தான் தூய ஆவியாரால் நமக்கு திருமுழுக்கு அருளவிருப்பவர் என இயேசுவை குறித்து சான்று பகர கூறியதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்கிறோம். திருமுழுக்கு என்னும் அருள்சாதனம் வழியாக தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்ட நாம் ஒவ்வொருவருமே இயேசுவை குறித்து சான்று பகர இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். திருப்பலியில் ஒவ்வொரு நாளும் இது விசுவாசத்தின் மறைபொருள் என்று குருவானவர் கூறும்போது, "ஆண்டவரே! நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினை எடுத்துரைக்கின்றோம்" என பதில் மொழி கூறுகிறோம். ஆனால், இதனை நடைமுறையில் நாம் செய்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் எழுப்பி பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.
வெறுமனே வாய் வார்த்தைகளாக நமது செபங்கள் இருப்பது ஏற்புடையது அல்ல. . நம்முடைய ஜெபங்கள் இருக்குமாயின் அது ஏற்புடையது அல்ல. மாறாக நாம் சொல்லக்கூடிய ஒவ்வொரு சொல்லும் செயல்வடிவம் பெற வேண்டும். ஆண்டவரே! நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையின்றோம்! உயிர்ப்பினை எடுத்துரைக்கின்றோம் என்ற ஜெபத்தை சொல்லக்கூடிய நாம் ஒவ்வொரு நாளும் முடிந்த மட்டும் முடிந்த நபர்களிடம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறப்பை பற்றியும் அவரது உயிர்ப்பை பற்றியும் சான்று பகர கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் சென்ற பகறாமல் நாம் மேலோட்டமாக இருக்கும் பொழுது, அது உண்மையான அர்த்தமான வாழ்வாகவும் ஜெபம் ஆகவும் இருக்காது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்பட்டது என நாம் வாசிக்க கேட்கிறோம்.
பரபரப்பான இந்த உலகத்தில், பலவிதமான பணிகளுக்கு மத்தியில் எப்போதும் வேகவேகமாக ஒருவிதமான பதட்டத்தோடு நகர்ந்து கொண்டிருக்க கூடிய நாம் அனைவரும், இன்றைய நாளில் ஒரு நிமிடம் அமைதியாக நம்முடைய செயல்பாடுகள் குறித்து சிந்திக்கவும், நாம் உண்மையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் சான்று பகரக்கூடியவர்கள் தானா என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்க்கவும் இன்றைய வாசகங்கள் அமைய அழைப்பு விடுக்கின்றன. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்டது போல, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானை போல, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை பறைசாற்றக் கூடிய, சான்று பகரக் கூடிய பணியினைச் செய்ய அழைக்கப்படுகிறோம்.
எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை ஒருவர் மற்றவரோடு பகிரவும், இயேசுவுக்குச் சான்று பகரவும் நமது வாழ்வை அர்த்தமுள்ள வாழ்வாக அமைத்துக்கொள்ள உள்ளத்தில் உறுதி ஏற்றவண்ணம் இறைவனின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக