கன்னி மரியாள் இறைவனின் தாய் முன்னுரை
வரங்களையும் வளங்களையும் நமக் கீந்து
முதிர்மனங் கொண்ட முன்மாதிரி மனிதராய் - நமைமாற்ற
அனுபவங்கள் பல நிறைவாய் தந்துவிட்டு
சென்றிருக்கிறது 2020 ஆம் ஆண்டு
புலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு
இறைவன் நமக்களித்த இனிய வாழ்த்து
அவர் உலகினோர்க்கு வழங்கிய அன்பு பரிசு
இந்த புதிய ஆண்டிலே இறைவனது இரக்கமிகு அருட்கொடையிலும், நிலைசாயா நம்பிக்கையிலும் அசைக்க முடியா விசுவாத்திலும் ஒன்றித்து வாழ அழைக்கப்படுகிறோம்.
புத்தாண்டையே பரிசாக கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார் இதை உணர்ந்து கொள்வோம். புரிந்து கொள்வோம்.
பழையன கழிவோம் - தீமைகளை மட்டும்
புதியன புகுவோம் - நன்மைகளால் நிறைவோம்.
மேலும் இன்று நாம் அன்னை மரியால் இறைவனுடைய தாய் என்று திருஅவையால் அறிவிக்கப்பட்ட விழாவை கொண்டாடுகிறோம். கிறிஸ்து பிறப்பு நமக்குள் ஒளியை ஏற்றுகிறது. இந்த ஒளி இந்த புதிய ஆண்டு முழுவதுமாக நம்மில் ஒளிர, ‘நம்பிக்கை’ என்னும் எண்ணெயை நம் மனதில் விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நம்பிக்கை என்னும் வேர் காய்ந்து போனால், வாழ்க்கை என்கிற மரம், பட்டுப்போகும். அன்னை மரியாள் இயேசுவின் வாழ்வுக்கு வேராக இருந்தவள். அவளின் தாழ்ச்சி, எளிமை, தூய்மை, பக்தி யாவுமே தாய்மைக்கு மணிமகுடம். மரியாள், இயேசு என்னும் சிற்பத்தை பக்குவமாய் செதுக்கிய சிற்பி. காணாமல் போன போதும், கல்வாரி மலையிலும் தன் மகனுக்காய் பதறிய இதயம். தன் வாழ்வு முழுவதும் இறைவனுக்கும், அவர் சித்தத்திற்கும் அர்பணித்த தியாகச் செம்மல். துன்பமும் துயரமும் வாட்டும்போது, இவ்வுலகிற்கு அமைதி செய்திச் சொன்ன சமாதானப்புறா. இதனால்தான் இன்று ‘மரியாள் இறைவனின் தாயானால்’. ‘இதோ உன் தாய்’ என்று, இயேசுவும் தாய்மைக்கு மணிமுடி சூட்டுகிறார். தவறுகளையேல்லாம் மன்னிக்கும் இதயம் தாயின் இதயம் ஒன்றே. எனவே, இப்புத்தாண்டு தினத்தில் இத்தாயின் வழி செல்வோம், இறையருளைப் பெற்று, இந்நம்பிக்கை ஆண்டை வெற்றியுடன் துவங்குவோம். அதற்கான வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக