சனி, 26 டிசம்பர், 2020

மாசில்லா குழந்தை தினம் (28.12.2020)

மாசில்லா குழந்தை தினம்


முன்னுரை

இறையேசுவில் அன்புகொண்டு அவரின் பிள்ளைகளாய் வந்திருக்கும் இறைமக்கள் (அ) சகோதர சகோதரிளே உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்னையாம் திருச்சபை இன்றைய நாளில் மாசில்லா குழந்தைகள் தினத்தை கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஏன்? என்று பார்க்கும்போது, இயேசு பிறந்தபோது இயேசு பாலனைக் கண்ட மூன்று ஞானிகள் தம்மிடம் திரும்பி வரவில்லை என்ற கோபத்தினால் பெத்லகேமிலும், அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள 2 வயதிற்குற்பட்ட ஆண்களை கொல்ல ஆணையிட்டான். அவ்வாறு இறந்த குழந்தைகளின்  நினைவாகத் திருச்சபை அவர்களையும் மறைசாட்சிகளாகவும், முதல் மறைசாட்சிகளாகவும் மதித்து விழா எடுத்து சிறப்பிக்கின்றது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த குழந்தைகளின் விழாநாளில் இன்றை இறைவார்த்தைகளின் வழியாக இறைவன,; ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை என்றும், என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன் என்று புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வழியாகவும், வானதூதர்  யோசேப்புக்கு கனவின் மூலம் எச்சரித்து அவர் குடும்பத்துடன் எகிப்துக்கு தப்பி ஓடியதும், ஏரோது மன்னன் பெத்லகேமில் உள்ள இரண்டு வயதிற்குற்பட்ட குழந்தைகளை கொலை செய்யும்படியும் நிகழ்வுகளை கொண்ட புனித மத்தேயு நற்செய்தி வழியாகவும் இறைவன் நம்மிடம் பேசுகிறார். எனவே நாமு; அத்தகைய ஒளியால் இறைவன், தெய்வபாலனாக நம் மனதிலும் பிறந்திருக்கிறார் என்ற எண்ணங்களோடும் அந்த குழந்தை யேசுவுக்காக மரித்த குழந்தைகளுக்காகவும் மற்றும் நமது பங்குகளில் மரித்த அனைத்து மாசில்லா குழந்தைகளுக்காகவும் ஜெபிப்போம். மேலும் என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என்று இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்” என்ற புனித யோவானின் விருப்பப்படி வாழவும் நீங்கள் சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசுக்;கு நுழைய முடியாது என்ற இயேசுவிடம் நாமும் குழந்தைகள் போல் மாசில்லா வாழ்வு வாழ வரம் கேட்டு இத்திருப்பலியில் தொடர்ந்து பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை: (1யோவா 1:5-2:2)

ஒளியின் மக்கள் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெறிவிக்கிறேன். இறைமகன் இயேசு கிறிஸ்து “நானே உலகின் ஒளி என்னை பின் செல்பவர் இருளில் நடவார்” என்று பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் அதற்கு சான்றாக புனித யோவனும் தனது முதல் திருமுகம் வாயிலாக கடவுள் ஒளியாய் இருக்கிறார் என்றும் அந்த ஒளியில் நடந்தால் வாழ்வு, மன்னிப்பு தாழ்ச்சி ஆகிய ஆசீர்களை பெறமுடியம் என்பதை உணரவும், இயேசுவே நம் பாவங்களுக்குக் கழுவாய் என்பதை உணர்ந்தும் இந்த முதல் வாசகத்திற்கு நம் முழு மனதுடன் செவிமெடுப்போம். 

மன்றாட்டுகள்: 

1. நானே உலகின் ஒளி என்றுகூறிய எம் இறைவா! உலகின் ஒளியான நீர் பிறந்தவுடன் உமக்காக மரித்த மாசில்லா குழந்தைகள் அனைவருக்காகவும், எம் பங்கில் மரித்த அனைத்து மாசில்லா குழந்தைகளுக்காகவும்  ஜெபிக்கின்றோம். நீர் தாமே அவர்களை உமது வான்வீட்டில் சேர்த்து கொள்ளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறன்றோம். 

2. சிறு பிள்ளைகளைப்போல் மாறாவிட்டால் விணணகத்திற்குள் நுழைய முடியாது என்று உரைத்த எம் இறைவா, பாவிகளாக வாழ்ந்து வரும் எங்கள் ஒவ்வொருவரையும் உம் கருணைக் கண் பாரும்.நாங்கள் ஒவ்வொருவரும் சிறு பிள்ளைகள் போல்  தூய்மையாக மாறுவதற்கு தேவையான அருளும் ஆசிரும் தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களைத் தடுக்காதீர்கள் என்று கட்டளையிட்ட எம் ஆயனே! எமது பங்கில் குழந்தை வரம் இல்லாமல் தவிக்;கும் ஒவ்வொருவருக்கும் குழந்தை பாக்கியத்தை அருளி அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று எல்லாம் வலல இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4. இச்சிறியவர்களுக்குச் செய்ததை எல்லாம் எமக்கே செய்தீர்கள் என்று கூறிய எங்கள் தேவனே, இன்றைய உலகில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கக்கூடிய பாலியல் வன் கொடுமைகளுக்காகவும், குழந்தை தொழிலாளர்கள்  ஒடுக்குமுறைக்காக மன்றாடுகிறன்றோம். தேவனே அத்தகைய உம் பிள்ளைகளுக்கு எதிராக உள்ள அனைத்துக் கொடுமைகளை அகற்றி நல்வாழ்வு தந்திட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...