புத்தாண்டு திருவிழிப்புத் திருப்பலி
திருப்பலி முன்னரை:
அன்புக் குழந்தை இயேசு பாலனின் அருள் நாடி, உறக்கம் களைந்து ஓடிவந்து ஒன்றாய் கூடியிருக்கும் பாசமிகு சகோதர சகோதரிகளே! மாற்றம் ஒன்றே மாறாத இந்த உலகில் எப்போதுமே பழையன கழிதலும் புதியன புகுவதுமாய் உள்ளது. புதுமையை நாடி எந்நாளும் ஓடிக்கொண்டிருக்கும் மாறாத இவ்வுலகில் நாம் ஒவ்வொருவரும் மாற்றங்களைத் தேடி விடாபிடியாய் ஓடிக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய மாற்றம் நிறைந்த இவ்வுலகில் கடந்து போகும் ஒவ்வொரு கனமும் மாற்றம் காணும் சூழலில், இன்னும் ஒருசில மணித்துளிகளில் நாம் புதிய வருடத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கின்றோம். “எதுவும் மறந்து போகும் எல்லம் கடந்து போகும்”என்ற எண்ணத்தில் வருகின்ற இந்தப் புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோமா? அல்லது வழக்கமாக இல்லாமல், நமது வாழ்வில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் முன்னேற்றத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனும் தகுந்த தயாரிப்புடனும் நாம் இந்த புதிய ஆண்டை வரவேற்கப் போகிறோமா? 1சாமூவவேல் 16:7ஆம் வசனத்தில் கொடுக்கப்டட்டுள்ள,“ஆண்டவர் முகத்தை அல்ல, அகத்தை பார்க்கிறார்” என்ற இந்த வசனம்,“ஆண்டவர் நம் முக மாற்றத்தை அல்ல, அக மாற்றத்தையே எதிர்பார்க்கிறார்” எனற கருத்தை நமக்கு உணர்த்துகிறது. முனதளவில் மாற்றம் கண்டு மகிழ்ச்சி நிறை புது வாழ்வை படைத்ததிட இன்றைய வாசகங்களும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. புலரப்போகும் புதிய ஆண்டில், இப்புவியில் புதிய மனிதராய் வாழவும், புது உலகம் படைத்திடவும், புத்துணர்வோடு, புதிதாய் பிறந்திருக்கும் இயேசு பாலனிடம் மன்றாடுவோம். இறைவனின் அன்பையும், அருளையும், இறக்கத்தையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டு ஒரு குடும்பமாய் உலகை மாற்ற புறப்படுவோம் இப்புதிய ஆண்டில்.
முதல் வாசக முன்னரை: (எண் 6: 22-27)
அன்பு இறைக்குலமே! இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக இவ்வாறு சொல்கிறார். “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! அவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!”எனவே, அதே ஆசீரை பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் கடவுள் நமக்கு அளித்திட, அவ்வருளை நாம் பெற்றிட நமக்கு அழைப்பு விடுக்கும் இம் முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: (கலாத்தியர் 4: 4-7)
தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய மடலின் வழியாக வெற்றுச் சட்டத்திற்கு அடிமைகளாய் இருந்த நம்மை மீட்டு தம்முடைய பிள்ளைகளாக்குமாறு தம் ஒரே மகனை பெண்ணிடம் பிறந்தவராக இவ்வுலகிற்கு அனுப்பினார். அது மட்டுமல்லாமல், நாம் கடவுளை அப்பா, தந்தை என்று அழைக்கும் உரிமையையும் அவர் மூலம் நமக்குத் தந்தருளினார் என்ற சிந்தனையோடு செவிமெடுப்போம், இரண்டாம் வாசகத்திற்கு.
மன்றாட்டுகள்:
1. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! புpறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக உம்மிடம் மன்றாடுகின்றோம். நீரே அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, தேர்வை நல்ல முறையில் எழுதவும், நல்ல மதிப்பெண் பெறவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. தலைவர்களுக்கெல்லாம் தலைவரே எம் இறைவா! ஏம் திருச்சபையை வழிநடத்தும் தலைவர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்;, துறவியர் கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரையும் ஆசீர்வதியும். நீரே அவர்களுக்கு உமது ஆசியைப் பொழந்து, அவர்களோடு இருந்து, எங்களை வழிநடத்த வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஆறுதலின் பிறப்பிடமே எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களோடு இருந்து எல்லாவற்றிலும் எங்களை வழிநடத்தியதற்கு நன்றியாகவும், வரக்கூடிய புதிய ஆண்டில் எங்கள் சொல், செயல்,சிந்தனை அனைத்திலும் ஆறுதலாய் எங்களுடன் இருந்து எங்களை காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பு ஆண்டவரே! ஏம் பங்கு மக்களை உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். இப்புதிய ஆண்டில் அனைவருக்கும் உடல், உள்ள ஆன்ம சுகம் தந்து, அவர்கள் செய்யும் தொழில் சிறக்கவும் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையவும், இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. மருத்துவருக்கெல்லாம் மருத்துவரே எம் இறைவா! பரவிவரும் பல்வேறு நோய்களிலிருந்தும், இயற்கைப் பேரிடர்களிடமிருந்தும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் அனைத்து மக்களையும் காக்கவும், நீரே அவர்களுக்கு உற்ற துணையாய் இருக்கவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக