சுகமளிக்கும் செபம்
என் இயேசுவே
என் இறைவா
எனக்காக பிறந்து வாழ்ந்து
எனக்காக இறந்த
என் இயேசுவே
காக்கின்ற தெய்வமே
உன் கையில் என்னை
ஒப்படைக்கின்றேன்
இயேசுவே
உன் காயங்களால்
என் மனக்காயங்களை ஆற்றும்.
உம் இரக்கத்தால்
என் நோய்களை குணமாக்கி
என்னை கழுவி தூய்மையாக்கும்.
உமது பரிசுத்தமான சிலுவையினால்
என்னை தாங்கும்.
என் ஏக்கத்தையும்,
கோபத்தையும்,
ஏமாற்றத்தையும்
உமது பரிசுத்த சிலுவையில்
ஒப்புக் கொடுக்கிறேன்
இயேசுவே
எனக்கு ஆற்றலையும்,
ஆறுதலையும்,
அமைதியையும்,
ஆசீரையும் தாரும்.
இயேசுவே உமக்கு நன்றி...
ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக