வியாழன், 9 மார்ச், 2023

நன்மை செய்ய ஆற்றல் பெறுவோம்! (1-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

யூதர்களுக்கு துன்பம் நேர்ந்த போது என்ன செய்வதென்று அறியாத எஸ்தரின் வளர்ப்பு தந்தையான மொர்த்தக்காய் அவர்கள் எஸ்தரின் உதவியை நாடுகிற போது கடவுளிடத்தில் மன்றாடுவதற்கு எஸ்தர் பணிகின்றார். அதன் அடிப்படையில் கடவுளிடத்தில் தங்களுக்கு நேருகின்ற இந்த இன்னலில் இருந்து தங்களை காக்க வேண்டும் என மொர்த்தக்காய்  மன்றாடியதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்கின்றோம். 

 இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள் என ஆண்டவரின் வார்த்தையானது நமக்கு தரப்படுகிறது.

 ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரிய நாம் ஒவ்வொருமே நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் மற்றவர்கள் நமக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணுவது போல,  நாமும் நம்மால் இயன்ற நன்மைகளை மற்றவர்களுக்கு செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். எப்படி ஒருவர் நமக்கு தீங்கு இழைத்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் நாம் தவிக்கிறோமோ, அப்படித்தான் மற்றவரும் தவிப்பார்கள் என்பதை உணர்ந்தவர்களாக நம்மால் இயன்ற அளவு நன்மைகளை மற்றவர்களுக்கு செய்யக்கூடியவர்களாக மற்றவரையும் நம்மை போல எண்ணக்கூடிய மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...