புதன், 1 மார்ச், 2023

இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம்! (24-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
       ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை காண்பதற்காக அவர் தாயும் சகோதரர்களும் வெளியே நின்று கொண்டிருந்த போது, இயேசுவின் இடத்தில் சென்று சிலர், உம் தாயும் சகோதரர்களும் உம்மை காண்பதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னபோது, யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்ற கேள்வியை எழுப்பியவராக தன் தாய் யார் தன் சகோதரர் யார் என்று விளக்கத்தையும் கொடுத்தார். 

         இறை வார்த்தையை கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறவர்களே
என் தாயும் சகோதரர்களும் ஆவார் என்று இயேசு கூறியதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் நாம் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவின் சகோதரர்களாக இன்றும் என்றும் நாம் இருப்பதற்கான ஒரே வழி, அவரின் வார்த்தைகளைக் கேட்டு அதனை வாழ்வாக்குகின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். எப்போது ஆண்டவரின் வார்த்தைகளை நாம் வாழ்வாக்க துவங்குகிறோமோ அப்போது ஆண்டவர் இயேசுவின் சகோதரர்களாக நாம் மாறுகிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு கடவுளின் வார்த்தையை வாழ்வாக்குவதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...