புதன், 1 மார்ச், 2023

நற்செயல் புரிய நன்மனம் தாரும்!(21-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
  நாளும் நாம் பின்பற்றி செல்லுகின்ற இந்த கடவுளை நாம் எப்படி உணர்ந்து இருக்கிறோம் என்பதை மீண்டுமாக சுய ஆய்வு செய்து பார்க்க இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.

       இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு தரப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். கடவுள் செய்த வல்ல செயல்களை எல்லாம் கண்டு இந்த இயேசுவை நாடிச் செல்கின்ற மக்கள் கூட்டம் ஒருபுறம். இந்த இயேசு செய்கின்ற பணியினை தவறுதலாக புரிந்து கொண்ட உறவினர் கூட்டம் ஒரு புறம், என இருவகையான மனிதர்களை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பல நேரங்களில் நன்மைத்தனங்களை முன்னெடுக்கிற போது,  பல புதிய உறவுகள் நம்மை நாடி வருவதை நாம் கண்கூடாகக் காண முடியும். அதே சமயம் நாம் நன்மைத்தனங்களை முன்னெடுப்பதால் ஒவ்வொரு நாளும் நமது பெயரும் புகழும் உயர்கிறது என்றால், நமது உறவுகளிடையே அது ஒரு வெறுப்பையும் ஒரு விதமான தவறுதலான புரிதலையும் உருவாக்குகிறது.

      எத்தகைய எண்ணங்கள் மற்றவர் மனதில் இருக்கிறது என்பதை விட நாம் எத்தகைய மனநிலையோடு ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இதயத்தில் இருத்திப் பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். நாம் செய்கிற ஒவ்வொரு செயலையுமே, கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுளின் மனநிலையை நம்மில் பிரதிபலிக்கின்ற மனிதர்களாக நாளும் இந்த சமூகத்தில் செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...