புதன், 8 மார்ச், 2023

தவக்காலம் - சாம்பல் புதன்! (22-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்று நாம் தவக்காலத்தை தொடங்குகிறோம். தவக்காலம் என்பது தகுதியுள்ள மனிதர்களாக நம்மை நாமே மாற்றிக் கொள்ள அழைப்பு விடுக்கின்ற  ஒரு காலம்.  இன்றைய நாள் இறை வார்த்தைகள் அனைத்துமே ஜெபத்திலும் தவத்திலும் தர்ம செயல்களிலும் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இந்த வலியுறுத்தல்கள் அனைத்துமே நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்ளக் கூடியவர்களாக கடவுளை நோக்கி திரும்பி வருவதற்கான அழைப்பு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக நம்மிடம் இருந்து சரி செய்யப்பட வேண்டியவைகளை கண்டு உணர்ந்து, சரி செய்து கொண்டு நமது வாழ்வை செபத்திலும், தவத்திலும், தர்ம செயல்களிலுமாக அலங்கரித்துக் கொண்டு ஆண்டவருக்கு உரிய ஒரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு பயணிப்பதற்கான அழைப்பு இன்றைய நாளில் நமக்கு தரப்படுகிறது. இந்த அழைப்புக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இந்த நாளை இனிய நாளாக மாற்றுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...