வெள்ளி, 3 மார்ச், 2023

ஏற்றப்பட்ட தீபமாக ஒளி வீசுவோம்! (5-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. தூய ஆவியாரின் தூண்டுதல் பெற்றவர்களாக நாம் ஒவ்வொருவருமே நம்மிடம் இருப்பதை மற்றவரோடு எப்போதும் பகிர்ந்து கொண்டு வாழ இன்றைய முதல் வாசகமும் இரண்டாம் வாசகமும் அறிவுறுத்துகின்றன. இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளும் போது நாம் உப்பை போல மற்றவர்களுக்கு பயன் தருகின்றவர்களாக இருப்போம்.  மற்றவர்களுக்கு பயன்தராத ஒரு வாழ்வை நாம் வாழுகிற போது உவர்ப்பற்ற நிலையில் உப்பு வெளியே கொட்டப்படுவது போல நாமும் வீசி எறியப்படுவோம் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.

 தூய ஆவியின் தூண்டுதல் பெற்ற நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு அதற்கு செயல் வடிவம்  தருகின்ற நபர்களாக இருக்கின்ற போது மலையின் மீது ஏற்றப்பட்ட விளக்கு போல, மற்றவர்களுக்கு பலன் தருகின்ற வகையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்வோம். இத்தகைய வாழ்வு நமது வாழ்வாக மாறிட இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஏற்றப்பட்ட விளக்கைப் போல மற்றவர்களுக்கு பயன் கொடுக்கக் கூடியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...