புதன், 8 மார்ச், 2023

நன்றியுள்ளவர்களாக வாழ்வோம்! (15-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
      இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப அழிவிலிருந்து தம்மை காத்துக் கொண்ட இறைவனுக்கு நன்றி சொல்லி நன்றியின் பலியினை செலுத்துகின்ற நோவாவை குறித்து இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற ஒரு மனிதன் நம்பிக்கையோடு இயேசுவை நாடி வந்து பார்வை வேண்டி நிற்கின்றான். அவனது கண்களை தொட்டு குணப்படுத்திய இயேசு,  எதை பார்க்கிறாய் என்று கேட்க, மனிதர்களை பார்க்கிறேன், அவர்கள் மரங்கள் போல் தெரிகிறார்கள் என்று சொல்லுகிறான்.  கடவுளின் அருளால் தெளிவு பெறுகின்றான். இந்த இறை வார்த்தை பகுதிகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிறபோது,  பல நேரங்களில் மனிதர்கள் ஆகிய நாம் மரங்கள் போல இருந்து விடுகின்றோம். நாம் கடவுள் நமது வாழ்வில் செய்த எல்லா விதமான அளப்பரிய காரியங்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்து நன்றி செலுத்துகின்ற மனிதர்களாக நாளும் நம்பிக்கையில் வளரக்கூடியவர்களாக தெளிவான பார்வை கொண்ட மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பினை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு தருகின்றன.  இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது எண்ணத்தையும் நமது பார்வையையும் தெளிவாக மாற்றிக் கொண்டு கடவுள் செய்த காரியங்களுக்கு நன்றி சொல்லுகின்ற நன்றியின் மனிதர்களாக இருப்பதற்கு ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...