திங்கள், 13 மார்ச், 2023

இறக்கத்தான் பிறந்தோம்! இரக்கத்தோடு இருப்போம்! (14-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
        
                இரக்கத்தோடு வாழ்வதற்கு இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் அழைப்பு விடுக்கின்றார். எத்தனையோ நன்மைகளை கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட நாம், மற்றவர்களுக்கும் அதே நன்மைகளை செய்கின்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை அழகிய உவமை வாயிலாக இறைவன் எடுத்துரைக்கின்றார்.

       எத்தனையோ முறை நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த அமைத்துக் கொள்ள நாம் தவறி இருந்தாலும் கூட, நமக்கு நன்மைகளை மட்டுமே செய்த நம் மீது இரக்கத்தை மட்டுமே பொழிந்த இந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் சக மனிதர்கள் மீது இரக்கம் காட்டவும், மன்னிப்பை வழங்கவும், அன்பை அதிகப்படுத்தவும் ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்ய இறைவன் உணர்த்துகின்ற இந்த வாழ்வுக்கான நெறியை இதயத்தில் இருத்தியவர்களாக,  நம் வாழ்வில் இரக்கத்தையும் மன்னிப்பையும் வழங்குகின்ற மனிதர்களாக வாழ இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...